Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தீர்த்தகிரீஸ்வரர் கோவிலில் மாசிமக ... திருத்தணி முருகன் உண்டியல் காணிக்கை ரூ.55 லட்சம் வசூல்! திருத்தணி முருகன் உண்டியல் காணிக்கை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மண்டைக்காடு கோயில் திருவிழா: லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 மார்
2012
10:03

குளச்சல : மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் மாசிக் கொடைவிழா நிறைவு நாள õன நேற்று பல லட்சம் பக்தர்கள் பலமணி நேரம் காத்திருந்து அம்மனை தரிசித்து சென்றனர். சுற்றுவ ட்டார கிராமங்களில் ஆயிரக் கணக் கான பக்தர்கள் பொங் கலிட்டு வழிபாடு செய்தனர். பெண்களின் சபரிமலை என அழைக்கப்படும் மண்ø டக்காடு பகவதி அம்மன் கோயில் மாசிக்கொடைவிழா கடந்த நான்காம் தேதி கொடி யேற்றத்துடன் துவங்கியது. 10 நாட்கள் நடந்த விழாவில் அம்மனுக்கு பஞ்சாபிஷேகம், அத்தாழபூஜை, அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி வருதல், வலியபடுக்கை எனும் மகாபூஜை, பெரிய ச்சக்கர தீவெட்டி ஊர்வலம் உள்ளிட்டவை நடந்தது. நேற் று அதிகாலை இரண்டு மணிக்கு மண்டைக்காடு சாஸ் தா கோயிலிலிருந்து யானை மீது களபம் கொண்டுவ ரப்பட்டு அம்மனுக்கு சார்த்த ப்பட்டது. 3.30 மணிக்கு அம்மன் வெள்ளிப்பல்லக்கில் பவனிவரும் நிகழ்ச்சி நடந்தது.

அடியந்திரபூஜை: மாசிகொடைவிழாவின் நிறைவு நாளான நேற்று அதிக õலை 4.30 மணிக்கு அடியந் திரபூஜை நடந்தது. ஒருசூ லாயுதத்தில் மண்டைக்காடு பகவதி அம்மனை ஆவகானம் செய்து, அதை கருவறைக்கு முன் உள்ள மகாம ண்டபத்தில் நிலைப்படுத்தி வைத்தனர். கோயிலில் குத்தி யோட்டம் எனும் நேர்ச்ø சக்கடனை அம்மன் முன்னின் று நடத்து வதற்காக வும் கோயிலுக்கு வெளியே குடிய மர்த்தப்படுவதாக ஐதீகமாக கூறப்படுகிறது. மேலும் லட்சக்கணக்கான பக்தர்கள் அம்மனை தரிசிக்க கோயிலில் கூடுவதால் அவ ர்களுக்கு எளிதில் காட் சியளிக்கவும், கோயில் வளாக த்த்தில் ஒரு கிலோமீட்டர் தூரத்தில் பொங்கல் வழிபாடு செய்யும் பக்தர்களுக்கு நேரில் சென்று அருள்பாலிக்கவும், அம்மன் வெளியில் பக்தர்கள் வடிவில் உலாவருவதாகவும் ஐதீகம் உள்ளது. இதற்காக அம்மன் கோயில் நடை நேற்று பகல் முழுவதும் சார்த்தப்பட்டு, அம்மன் சூலத்தில் வெளிப் பக்கத்தில் குடியமர்த்த ப்ப“ட டார். நேற்று மாலை ஐந்தும ணிவரை வெளியில் குடியம ர்த்தப்பட்டு மாலை தீபாராதனைக்குப்பின்மீண்டும் கோயில் கருவ றையில் குடியமர்த்தினர்.

குத்தியோட்டம்: மண்டைக்காடு பகவதி அம்மனுக்கு செலுத்தப்படும் நேர்ச்சை வழிபாடுகளில் குத்தியோட்டம் நேர்ச்சை வழிபாடு மட்டும் ஆண்டுக்கு இரு முறை செய்யப்படு கிறது. ஆண் பக்தர்கள், வேண் டுதல்களை நிறைவேற்றிய பகவதி அம்மனுக்கு செலுத் தும் நன்றிக் கடன் வழிபாடு குத்தியோட்டம். இது மாசிகொடைவிழாவின் கடைசி நாள் மற்றும் பரணிக் கொடைவிழா ஆகிய 2 நாட்க ள் நடக்கிறது. குத்தியோட்ட நேர்ச்சை செலுத்தும் ஆண்கள் கடலில் புனித நீராடி தங்களை தூய்மைப்படுத்துகின்றனர். வெள்ளி மற்றும் செம்பால் ஆன கம்பிகளை தங்கள் இடுப்புப் பகுதியில் குத்தி முதுகுபுறமாக மறுப்பக்க இடுப்பில் குத்திக்கொண்டு, அம்மன் கோயில் மற்றும் சாஸ்தா கோயில்களில் சுற்றி ஓடிவருகின்றனர். நேற்று அதிகாலை ஐந்து மணிக்கு நடந்த குத்தியோட்ட பூஜை யில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

பூமாலை, மாவிளக்கு நேர்ச்சை: 12 வயதிற்குட்பட்ட பெண் பக்தர்கள் செலுத்தும் நேர்த்திக்கட னான பூமாலை மற்றும் மாவிளக்கு நேற்று காலை நடந்தது.
இதில் 12 வயதிற்குட்பட்ட பெண்களை அம்மனை ப்போன்று அலங்கராம் செய்து அவர்கள் கழுத்தில் பூமாலை அணிவிக்கபடுகிறது. பின்பு அம்மனாக ஆங்கரிக்கப்பட்ட பெண்கள் கையில் மாவிள க்கேந்தி கோயிலை சுற்றி வருகின்றனர். ஏராளமான பெண்கள் இந்த பூமாலை, மாவிளக்கு நேர்ச்சை கடனை பயபக்தியுடன் செலுத்தினர்.

லட்சக்கணக்கான பக்தர்கள் சாமிதரிசனம்: மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் நேற்று அதிகாலை முதல் நள்ளி ரவுவரை பக்தர்கள் நீண்டவ ரிசையில் நின்று அம்மனை தரிசனம் செய்தனர். கேரளா மற்றும் இந்தியாவின் பல மாநிலங்களிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் பலமணிநேரம் காத்திருந்து அம்மனை தரிசி த்துசெ ன்றனர். கோயிலின் கிழக்கு பக்கரோடு, மேற்கு ரோடு, கடற்கரை ரோடு மற்றும் கடற் கத்ரை என எங்கு நோக் கினும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பல்வேறு பகுதிகளிலிருந்தும் பெண்கள் இருமுடி கட்டியும், வேல் குத்திய படியும் நேர்ச்சை கடன்களை பூர்த்திசெய்யும் விதமாக அம்மன் சன்னதியில் குவிந்தனர். அனைத்து ரோ டுகளிலும் நெரிசல் காரணமாக பக்தர்கள் கூட்டம் மெதுவாகவே நகரமுடிந்தது. அரசு போக்கு வரத்துத்துறை சார்பில் மாவட்டத்தின் பல இடங்களிலிலிருந்தும் இயக்கப்பட்ட சிறப்புபஸ்கள் நிரம்பிவழியும் அளவிற்கு மக்கள் கூட்டம் காணப்பட்டது.

பொங்கல் வழிபாடு: கோயிலின் முன்பக்கம் உள்ள சத்திரம் காம்பவுண்டில் தற்காலிகமாக அமை க்கப்பட்ட பொங்கல் செட் டில் பெண்கள் பொங்கல் வழிபாடு செய்தனர். அதிக அளவு பக்தர்கள் வருகை இருந்ததால் தற்கா லிக பொங்கல் செட்டிற்கு வெளியே பல இடங்களில் பெண் கள் பொங்கல் வழி பாடு செய்தனர். கூட்டுமங்கலம், நடுவூர்கரை, கீழ்க ரை உள் ளிட்ட கிராம ங்களில் உள்ள தோப்புக்களில் உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் பொங்கலிட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவள்ளூர்; திருவள்ளூர் வீரராகவர் கோவிலில் சித்திரை பிரம்மோத்சவம், இன்று காலை கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
சிருங்கேரி; சிருங்கேரி சாரதா பீடத்தில் ஸ்ரீ சங்கர ஜெயந்தியை முன்னிட்டு ஆதிசங்கரருக்கு சிறப்பு அபிஷேக, ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; காஞ்சி சங்கரமடத்தின் 71வது மடாதிபதி சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள், நேற்று ... மேலும்
 
temple news
திருச்சி: பூலோக வைகுண்டமான ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயிலில்,  ராமானுஜர் ஜெயந்தி விழா சிறப்பாக ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; திருஇந்தளூர் தான்தோன்றீஸ்வரர் சுவாமி கோயிலில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar