Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பெரியநாயக்கன்பாளையத்தில் சகாய மாதா ... பழநியில் பக்தர்கள் அலகு குத்தி வழிபாடு பழநியில் பக்தர்கள் அலகு குத்தி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சித்தானந்தா சுவாமி கோவிலில் 1008 லிட்டர் பால் அபிஷேகம்
எழுத்தின் அளவு:
சித்தானந்தா சுவாமி கோவிலில் 1008 லிட்டர் பால் அபிஷேகம்

பதிவு செய்த நாள்

29 மே
2019
11:05

புதுச்சேரி: புதுச்சேரி கருவடிக்குப்பம் சித்தானந்த சுவாமிகள் 182 வது குருபூஜை விழாவையொட்டி சுவாமிக்கு 1008 லிட்டர் பால் அபிஷேகம் நடந்தது

கருவடிக்குப்பம் சித்தானந்தா சுவாமி கோவிலில், 182ம் ஆண்டு குரு பூஜை விழா, கணபதி ஹோமத்துடன் நேற்று துவங்கியது. கருவடிக்குப்பம், இ.சி.ஆரில் உள்ள சித்தானந்தா சுவாமி கோவிலில், குரு சித்தானந்தா சுவாமிகளின் 182ம் ஆண்டு குரு பூஜை பெருவிழா இன்று (29ம் தேதி) நடைபெற்றது,

இதனையொட்டி, நேற்று மாலை 6.00 மணிக்கு கலச பிரதிஷ்டை, கணபதி ஹோமம் செய்யப் பட்டு, இரவு 8.00 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது.இன்று குருபூஜை நடக்கிறது. அதனையொட்டி, காலை 6.00 மணிக்கு கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், ருத்ர ஜபம் நடக்கிறது. தொடர்ந்து, காலை 7:00 மணிக்கு குரு சித்தானந்தா சுவாமிக்கு மகா அபிஷேகமும், 9:30 மணிக்கு கலச புறப்பாடு, 10:00 மணிக்கு கலசாபிஷேகமும் நடக்கிறது. குருபூஜை விழாவையொட்டி, 7,000 பேருக்கு அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விழாவையொட்டி, இசை, நாட்டியம், நாடகம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.அதன் ஒரு பகுதியாக இன்று (29ம் தேதி) காலை 10:45 மணிக்கு கீதா முத்தையன் குழுவினரின் திரு ஒவாசகம் முற்றோதல் நடக்கிறது. மாலை 6:30 மணிக்கு புதுச்சேரி நாட்டியாஞ்சலி டிரஸ்ட் சூசைராஜ் குழுவினரின் நாட்டி யாஞ்சலி, இரவு 7:30 மணிக்கு நவாப் ராஜமாணிக்கத்தின் பிரதம சிஷ்யர் ராமலிங்க சிவா குழுவினரின் குரு சித்தானந்தா சுவாமிகளின் வாழ்க்கை வரலாற்றின் ஒரு சில அற்புதங்கள் என்ற நாடகம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை தேவசேனாதிபதி குருக்கள், சிறப்பு அதிகாரி கிருஷ்ணமூர்த்தி மணிகண்டன் மற்றும் தேவஸ்தான ஊழியர்கள் செய்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி, ஏழுமலையான் கோயிலில் புரட்டாசி மாதம்  நான்காம் சனிக்கிழமை என்பதால்  இலவச தரிசனத்திற்கு 20 ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; புரட்டாசி மாதம்  கடைசி சனிக்கிழமையை ஒட்டி காஞ்சிபுரம் வரதராஜ பெருமாளை தரிசனம் செய்ய ... மேலும்
 
temple news
மகாபலிபுரம்; ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீசங்கரவிஜயேந்திரசரஸ்வதிசுவாமிகள், அக்., 3ல் ... மேலும்
 
temple news
மதுரை: தமிழக முக்கிய கோவில்களில் சுவாமி தரிசனத்திற்கு, ஆன்லைன் முன்பதிவு செய்யும் நடைமுறையை ஏற்படுத்த ... மேலும்
 
temple news
திருக்கோவிலுார்; திருக்கோவிலுார், கீழையூர் வீரட்டானேஸ்வரர் கோவிலில் பெரியானை கணபதிக்கு சங்கடஹர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar