சின்னவடவாடியில் திரவுபதியம்மன் கோவில் தீமிதி திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01ஜூன் 2019 02:06
மங்கலம்பேட்டை: சின்னவடவாடி திரவுபதியம்மன் கோவில் தீமிதி திருவிழாவில், ஏராளமானோர் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். மங்கலம்பேட்டை அடுத்த சின்னவடவாடி திரவுபதியம்மன் கோவில் தீ மிதி திருவிழா, கடந்த 14ம் தேதி மாலை 6:00 மணிக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் துவங்கியது.
கடந்த 15ம் தேதி முதல் 22ம் தேதி வரை தினசரி இரவு 8:00 மணிக்கு அம்மனுக்கு அபிஷேக ஆராதனை நடந்தது.கடந்த 23ம் தேதி முதல் 30ம் தேதி வரை, காலை 7:00 மணிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, இரவு 9:00 மணிக்கு அலங்கரித்த வாகனத்தில் அம்மன் வீதியுலா நடந்தது. நேற்று (31ம் தேதி) தீமிதி திருவிழாவையொட்டி, காலை 7:00 மணிக்கு கழுமரம் ஏறுதல், காலை 9:30 மணிக்கு அரவாண் களபலி நடந்தது. மாலை 5:00 மணிக்கு நடந்த தீமிதி திருவிழாவில், ஏராளமானோர் தீ மிதித்து நேர்த்திகடன் செலுத்தினர். இரவு 7:00 மணிக்கு அம்மன் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.