Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
எத்தகைய பக்தி இன்னல் தீர்க்கும்? ஜோதிடம் பொய்யாகுமா?
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
இந்திர விமானம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 ஜூன்
2019
03:06

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் சித்ரா பவுர்ணமி விழா கொண்டாடப்பட்டாலும் மதுரையில் மிகவும் விசேஷமாக கொண்டாடப்படுகிறது. அதற்கான காரணத்தை பரஞ்சோதி முனிவரின், "திருவிளையாடல் புராணம் விரிவாகச் சொல்லியிருக்கிறது.

பிறப்பால் அந்தணர்களான விருத்திராசுரன், விஸ்வரூபம் என்னும் இருவரை தேவேந்திரன் கொல்ல, அவனை பிரும்மஹத்தி தோஷம் பிடித்துக் கொண்டது. தோஷம் நீங்க குரு பகவானிடம் வழி கேட்டான் இந்திரன். அதற்கு அவர், ""நீ பூலோகம் சென்று பல்வேறு கோயில்களில் வழிபட, ஓரிடத்தில் உனது பிரம்மஹத்தி தோஷம் நீங்கும் என்றார்.

அதன்படி, இந்திரன் காசி முதலான பல்வேறு தலங்களில் வழிபட்டு, தெற்கு நோக்கிச் சென்றான். மதுரையில் ஓரிடத்தில் கடம்ப மரத்தின் கீழ் சென்ற போது தன்னைப் பற்றியிருந்த தோஷம் நீங்கியதுபோல் உணர்ந்தான். அப்போது அவன் எதிரில் கடம்ப மரத்தடியில் பேரொளிப்பிழம்பாக சிவபெருமான் காட்சி தந்தார். ஈசனை தொழுத இந்திரன், அங்கே மகேஸ்வரனுக்கு ஒரு கோயில் கட்ட நினைத்து, உடனே வரும்படி தேவதச்சனுக்கு கட்டளையிட்டான். மதுரையம்பதி கோயிலில் சோமசுந்தரருக்கு இந்திரன் விமானம் அமைத்ததால் அதற்கு, "இந்திர விமானம் என்று பெயர்.

கோயில் எடுத்த இந்திரனுக்கு, கடம்பவனேஸ்வரராகக் காட்சி தந்த சுந்தரேசர், ஒவ்வொரு வருடமும் சித்ரா பவுர்ணமி நாளில் தன்னை வந்து வழிபடும்படி கட்டளையிட்டார். அதன்படி ஒவ்வொரு ஆண்டும் இந்திரன் இந்நாளில் மதுரை தலம் வந்து ஈசனை வழிபடுகிறான் என்கிறது திருவிளையாடல் புராணம். அதனால்தான் மற்ற தலங்களைக் காட்டிலும் மதுரையில் சித்ரா பவுர்ணமி விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
சனிக்கிழமை தோறும் லட்சுமி நாராயணரை வழிபடுங்கள். ... மேலும்
 
திருச்சி சமயபுரம் மாரியம்மனை வேண்டிக் கொள்ளுங்கள். ... மேலும்
 
ஒன்பதும், அதன் மடங்குகளிலும் (18, 27, 36, 45, 54...) ஜபிக்கலாம். ... மேலும்
 
 
போர் வீரனைக் காக்கும் இரும்புக் கவசத்தைப் போல, உயிரை காக்கும் மந்திரக் கவசம் இது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar