Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பாவங்கள் நீக்கும் விரதம் ஆதிசேஷனின் அவதாரங்கள்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
வடை மாலை சாற்றுவது ஏன்?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 ஜூன்
2019
04:06

அஞ்சனாதேவிக்கும், வாயுபகவானுக்கும் மகனாக அவதரித்த ஆஞ்சநேயர் குழந்தையாக இருந்தபோது வானில் தோற்றமளித்த சூரியனை பழம்என்று கருதி எட்டிப் பிடிக்க எண்ணினார். வாயு புத்திரன் அல்லவா? அவர் எட்டிப் பிடிக்க எகிறி குதித்த வேகத்தில் வானில் பறக்கத் தொடங்கினார். சூரியனையே விழுங்குவதற்காக வாயுபுத்திரன் பறந்து செல்வதைக் கண்டு தேவர்கள் அனைவரும் திகைத்துப் போய் நின்றனர். அப்போது இந்திரன் தன் வஜ்ஜிராயுதத்தை வீசி ஆஞ்சநேயரை தாக்கினான். அதில் அவரது தாடை ஒடுங்கியது. இதன் காரணமாக சுந்தரன் என்ற இயற்பெயர் கொண்ட ஆஞ்சநேயர் அனுமன் என்று அழைக்கப்பட்டார்.

பால அனுமன் சூரியனைப் பிடிப்பதற்காக வானில் பறந்து கொண்டிருந்த அந்த நேரத்தில் ராகு கிரகம் சூரியனைப் பிடித்து கிரகணம் உண்டு பண்ணுவதற்காக நகர்ந்து கொண்டிருந்தது. ஆனால் ராகுவால் ஆஞ்சநேயரின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியவில்லை. இதனால் சூரியனைப் பிடிக்க ராகுவால் அப்போது இயலாமல் போய் விட்டது. பால அனுமனின் வீர, தீரத்தைக் கண்ட ராகு பகவான் மகிழ்ந்து அனுமனுக்கு வரம் கொடுத்தார். அதாவது தனக்கு உகந்த தானியமான/ உளுந்தால் வடை செய்து அதனை தன் உடல் போல் (பாம்பு உடல் கொண்டவர் ராகு) வளைந்து இருக்கும்படி செய்து (மாலையாக) எவர் ஒருவர் அனுமனுக்கு சாத்தி விழிபடுகிறார்களோ, அவரை எந்தக் காலத்திலும் நான் பிடிப்பதில்லை எனவும், தன்னால் வரும் தோஷங்கள் யாவும் நிவர்த்தி ஆகிவிடும் எனவும் ராகுபகவான் அனுமனுக்கு வரம் கொடுத்து வாழ்த்தினார். அதனால்தான் உளுந்தால் வடை செய்து 54, 108 அல்லது 1008 என்ற எண்ணிக்கையில் மாலையாகக் கோர்த்து ஆஞ்சநேயருக்கு செலுத்துகிறார்கள்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
சனிக்கிழமை தோறும் லட்சுமி நாராயணரை வழிபடுங்கள். ... மேலும்
 
திருச்சி சமயபுரம் மாரியம்மனை வேண்டிக் கொள்ளுங்கள். ... மேலும்
 
ஒன்பதும், அதன் மடங்குகளிலும் (18, 27, 36, 45, 54...) ஜபிக்கலாம். ... மேலும்
 
 
போர் வீரனைக் காக்கும் இரும்புக் கவசத்தைப் போல, உயிரை காக்கும் மந்திரக் கவசம் இது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar