Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஊட்டி மாரியம்மன் கோவில் தேர் ... தஞ்சை காசி விஸ்வநாதர் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவெள்ளரை பெருமாள் கோவில் கோலாகலமாக தேரோட்டம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 மார்
2012
11:03

மண்ணச்சநல்லூர்: திருவெள்ளரை ஸ்ரீபுண்டரீகாட்சப் பெரும õள் கோவிலில் நேற்று தேரோட்டம் கோலாகலமாக நடந்தது. திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள திருவெள்ளரை ஸ்ரீபுண்டரீகாட்சப் பெருமாள் கோவிலில் தேரோட்டம் நேற்று கோலாகலமாக நடந்தது. ஆழ்வார்களால் பாடப்பெற்றதும், 108 திவ்ய தலங்களுள் ஒன்றானதாகவும் விளங்குவது திருவெள்ளரை ஸ்ரீபுண்டரீகாசப் பெருமாள் கோவில். இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் தேரோட்டம் நடப்பது வழக்கம். இந்த ஆண்டுக்கான தேரோட்டம் மார்ச் 10ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழா நாட்களில் பெருமாள் தாயாருடன் அநுமந்த் வாகனம், கருட வாகனம், சேஷவாகனம், யானை வாகனம், பூந்தேர் போன்றவற்றில் எழுந்தருளினார். நேற்றுமுன்தினம் இரவு குதிரை வாகனத்தில் புறப்பாடும் வையாளி கண்டருளும் நிகழ்ச்சி நடந்தது. இதனையொட்டி காலை 6.30 மணியளவில் பெருமாள் தேரில் எழுந்தருளினார். காலை 10 மணியளவில் மண்ணச்சநல்லூர் எம் .எல்.ஏ., பூனாட்சி, தாசில்தார் மா ரிமுத்து பாண்டியன், அறநிலையத்துறை அலுவலர்கள் தேரை வடம்பிடித்து தேரோட்டத்தை துவக்கி வைத்தனர். பக்தர்களால் திருத்தேர் வடம்பிடிக்கப்பட்டு, நான்கு ரதவீதிகளை சுற்றிவந்து மதியம் 12.35 மணியளவில் தேர் நிலையை அடைந்தது. திருவிழாவில் திருவெள்ளரை, காளவாய்பட்டி, பூனாம்பாளையம், ராஜாம்பாளையம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் இணை கமிஷனர் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர். பல்வேறு அமைப்பு சார்பில் பக்தர்களுக்கு தண்ணீர் பந்தல் அமைத்து அன்னதானம், நீர், மோர், பானகம் வழங்கப்பட்டது. ஜீயபுரம் டி.எஸ்.பி., அழகேசன் தலைமையில் 80 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஏகாதசி விரதம் விஷ்ணு வழிபாட்டிற்கான முக்கியமான விரதமாகும்.. இன்றைய ஏகாதசி வருதினி ஏகாதசி என ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வையாவூரில் உள்ள சோமேஸ்வரர் கோவில் உழவார பணியின்போது, முருகன் உட்பட மூன்று ... மேலும்
 
temple news
சோழவந்தான்: தென்கரை மூலநாத சுவாமி கோயிலில் கொடிமரம் பாலஸ்தாபனம் நடந்தது.இங்கு சில நாட்களுக்கு முன்பு ... மேலும்
 
temple news
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பாஷ்யகார உற்சவம் இன்று திங்களன்று வெகு சிறப்பாகத் ... மேலும்
 
temple news
பழநி: பழநி கோயில் செல்ல பயன்பட்டு வரும் ரோப் கார் சேவை மாதாந்திர பராமரிப்பு பணிக்காக ஏப்.16ல் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar