சோழவந்தான்: சோழவந்தான் வைகையில் வைகாசி திருவிழா தீர்த்தவாரி உற்ஸவத்தில் எழுந்தருளிய ஜெனகை மாரியம்மனை ஏராளமானோர் தரிசித்தனர். இக்கோயிலில் திருவிழா ஜூன் 10 கொடியேற்றத்துடன் துவங்கி 17 நாட்கள் நடந்தன. நேற்று முன்தினம் மாலை கோயில் கம்பத்தில் கொடி இறக்கப்பட்டு, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்களை அர்ச்சகர் சண்முகவேல் செய்தார். இரவில் வைகையில் தீர்த்தவாரி உற்ஸவத்துடன் விழா நிறைவுற்றது. புஷ்பராஜ அலங்காரத்தில் அம்மன் பொன்னுாஞ்சலில் அருள்பாலித்தார். ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அதிகாரி சுசிலாராணி, உபயதாரர் பால்பாண்டியன் மற்றும் பலர் செய்தனர்.