பதிவு செய்த நாள்
02
ஜூலை
2019
05:07
ஹோமம் நடைபெறும்போது யாகத்தீயில் போடப்படும் திரவியங்கள் ஒவ்வொன்றிற்கும் ஒரு தெய்வீக பலன் உண்டு. சண்டிஹோமம் நடைபெறும் போது போடப்படும் திரவியங்களின் விவரமும், அதனால் கிடைக்கும் பலன்களும் இங்கே...
விளாம்பழம் -நினைத்த காரியம் ஜயம், கொப்பரைத் தேங்காய் -சகலகாரிய சித்தி,
இலுப்பைப்பூ - சர்வ வசியம், பாக்குப்பழம் - ரோக நிவர்த்தி, மாதுளம்பழம் - வாக்குப் பலிதம், நார்த்தம்பழம் - திருஷ்டி தோஷ நிவர்த்தி, பூசணிக்காய் - சத்ருநாசம், கரும்புத் துண்டு -கண்நோய் நிவர்த்தி, பூசணி, கரும்புத்துண்டு -சத்ருநாசம், எதிலும் வெற்றி, நாரத்தை - சகல சம்பத் விருத்தி, எலுமிச்சம்பழம் - கவலை தீர்த்தல், நெல் பொரி -பயம் நீக்குதல், சந்தனம் - ஞானானந்தகரம், மஞ்சள் - வசீகரணம், பசும்பால் - ஆயுள் விருத்தி, பசுந்தயிர் - புத்ர விருத்தி, தேன் -வித்தை, சங்கீத விருத்தி, நெய் - தனலாபம், தேங்காய் - பதவி உயர்வு, பட்டு வஸ்திரம் - மங்களப் பிராப்தி, அன்னம், பட்சணம் - சஞ்சலமின்மை சந்தோஷம், சமித்துகள் - அஷ்ட ஐஸ்வர்யம், சவுபாக்ய திரவியங்கள், பட்டுப்புடவை, பட்டுத் துண்டு, குங்குமச் சிமிழ், சீப்பு, மஞ்சள், புஷ்பம், எலுமிச்சம் பழம், வெற்றிலை பாக்கு, கிராம்பு, அஷ்ட லக்ஷ்மி கடாட்சம் பெறவும், தீர்க்க சுமங்கலி பிராப்தி பெறவும் அருள்புரிகிறது.