Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பாவம் தீர ஒரு தஸ்பீஹ் அழகுக் கலையின் தாயகம்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
நூறாண்டு காலம் வாழ்க
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 ஜூலை
2019
12:07

உலகில் நீண்ட காலம் வாழவே அனைவரும் விரும்புவர்.  வாழவும், செல்வம் சேரவும் வரம் கேட்கிறார் மகாகவி பாரதியார். நூறு வயது வாழ்ந்திட என்ன வேண்டும்? முதலில் மனம் சலனமற்று  ஓரிடத்தில் நிற்க வேண்டும். தற்போது உலகில் நடப்பது என்ன? நம் கையில் ரிமோட் கன்ட்ரோல் வந்த பிறகு மனம் அலைபாயும் விதத்தை சொல்லவும் வேண்டுமோ? தொலைக்காட்சியில் குறைந்தது 10 நிமிடம் ஒரு நிகழ்ச்சியை பார்த்தால் பெரிய விஷயம். ஓரிடத்தில் நிற்காமல் மாறி, மாறி மனம் ஓடுகிறது. கையில் இருக்கும் அலைபேசி படும்பாடு சொல்லி மாளாது. பேஸ்புக்கில் இருக்கும் போதே வாட்ஸ்– ஆப்புக்கும், அங்கு இருக்கும் போதே மெயில் பார்க்க ஓடுவதும், அங்குள்ள போதே யூ– டியூப்பிற்குள் நுழைவதும் என மனிதனின் மனம் குரங்காட்டம் ஆடுகிறது.  

மனதின் நிலை வினோதனமானது. நாம் இருக்கும் இடத்தில் மனம் இருப்பதில்லை.  வீட்டில் இருந்து கோயிலுக்கு கிளம்ப நாம் தயாராகும் போதே, மனம் கோயிலுக்குப் போய் சுற்றி வந்து விடும். நாம் கோயிலை அடைந்தவுடன் அது அங்கிருந்து கிளம்பி வீட்டிற்கு வந்து விடும். ஆக ஓரிடத்தில் நிற்க மறுக்கிறது. இதனால் தான் பெரியவர்கள்,  மனம், வாக்கு, உடல் மூன்றையும் இணைத்து வழிபட வேண்டும் எனக் கூறினர். எண்ணம், சொல், செயல் மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் பயணம் செய்ய வேண்டும். மனம் சலனமற்று இருந்தால் மட்டுமே இது சாத்தியமாகும். கலங்கிய நீரில் பிம்பம் தெரியாதது போல கலங்கிய மனதில் கடவுளின் திருவுருவம் தோன்றாது. புத்தியில் தெளிவு இருந்தால் மட்டுமே முகத்தில் ஒளி உண்டாகும். அதற்கு புத்தியில், குழப்பம் அற்ற தெளிந்த நிலை வேண்டும் என வேண்டுகிறார் மகாகவி. மனம் தூய்மை பெற்றால் புத்தியில் ஒளி தோன்றும். இருள் விலகும். தூய மனம் இருந்தால் பயம் இருக்காது. பயம் போனால் மன இறுக்கமோ, மன அழுத்தமோ ஏற்படாது. ஆனால் இன்று எல்.கே.ஜி குழந்தை முதல் எண்பது வயது பெரியவர் வரை சொல்லும் ஒரே சொல் ’டென்ஷன்’ தான். டென்ஷன் என்னும் மன இறுக்கம் தான் நோய்களுக்கு எல்லாம் அடிப்படை. மனதில் தூய்மை, தெளிவு, புத்தியில் இருள் இன்மை இருந்தால் வாழ்வில் அமைதி இருக்கும். அப்போது நூறாண்டுகள்  நோயின்றி வாழலாம். இப்படி வாழ்பவர் செல்வத்தை ஈட்ட தடையேது? எனவே செல்வத்துடன்  நூறாண்டு வாழ்ந்திட வரம் அருள வேண்டும் என மகா கணபதியை பிரார்த்திக்கிறார் பாரதியார். - என். ஸ்ரீநிவாஸன்

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
temple news
தமிழ் மாதப்பிறப்பு, திருவோணம், ஏகாதசி நாளில் படிப்பது ... மேலும்
 
temple news
உங்கள் உழைப்பை கொடுங்கள். அதுவே ... மேலும்
 
temple news
புறப்படும் முன் செவ்வாய்க்கு அதிபதியான முருகப்பெருமானை ... மேலும்
 
temple news
வடக்கும், கிழக்கும் இணையும் இடம் ஈசான்ய மூலை. இதுவே ... மேலும்
 
temple news
உங்கள் நட்சத்திரத்தில் இருந்து 1, 5, 9, 11வது நட்சத்திரம் வரும் நாளில் செயலைத் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar