பதிவு செய்த நாள்
11
ஜூலை
2019
12:07
உடுமலை:உடுமலை, சாய்பாபா கோவிலில், குரு பூர்ணிமா உற்சவம் வரும் 14ம் தேதி துவங்குகிறது.
உடுமலை, தில்லை நகரில் ஆனந்த சாய்பாபா கோவில் உள்ளது. கோவில் ஆண்டு விழா மற்றும் ஆடி மாத பவுர்ணமி தினத்தையொட்டி குருபூர்ணிமா உற்சவம் வரும் 14ம்தேதி முதல் 16ம் தேதி வரை நடக்கிறது.வரும் 14ம் தேதி காலை, கோவில் ஆறாவது ஆண்டு விழா நடக்கிறது.
காலை, 5:30 மணிக்கு ஆரத்தி, 7:00 மணிக்கு கணபதி ஹோமம், லட்சுமிஹோமம், ஆஞ்சநேயர் ஹோமங்கள் நடக்கிறது.அன்று காலை, 9:00 மணிக்கு ஆனந்த சாயிபாபாவுக்கு, 108 வலம்புரி சங்காபிேஷகம் நடக்கிறது. மாலையில், பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 படித்து, கடந்த பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு ஊக்கத்தொகை மற்றும் சான்றி தழ் வழங்கப்படுகிறது. இரவு, பக்தி மெல்லிசை நிகழ்ச்சி நடக்கிறது.
மறுநாள், 15ம்தேதி, காலை, 10:00 மணிக்கு விஷ்ணு சகஸ்ரநாமம், மாலையில், திருவிளக்கு பூஜை, இரவில் குழந்தைகளின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடக்கிறது. வரும் 16 ம்தேதி, காலை, 7:00 மணிக்கு அபிேஷக அலங்கார சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனையும், காலை, 10:30 மணிக்கு சத்யநாராயணபூஜை, அருகிலுள்ள ஜி.டி.வி. மண்டபத்தில் நடக்கிறது.மாலையில் சிறப்பு அலங்காரத்துடன் ஆனந்த சாய்பாபா திருவீதி உலா நடக்கிறது. நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடு களை ஆனந்தசாய் அறக்கட்டளையினர் செய்துள்ளனர்.