ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் தேர்த்திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11ஜூலை 2019 01:07
ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் வரும் 14ம் தேதி தேர்திருவிழா நடைபெற உள்ளது.
ரிஷிவந்தியத்தில் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த அர்த்தநாரீஸ்வரர் கோவில் தேர்திருவிழா கடந்த 5ம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது. 6ம் தேதி கொடியேற்றம் நடந்தது. தொடர்ந்து 8 நாட்களுக்கு இரவு பஞ்சமூர்த்தி சுவாமிகளின் வீதியுலா நடக்கிறது.நேற்று முன் தினம் 9ம் தேதி காலை 7:00 மணியளவில் மூலவர் சுயம்பு லிங்கத்திற்கு தேனபிஷேக மும், இரவு நாக வாகனத்தில் உற்சவர் முத்தாம்பிகை சமேத அர்த்தநாரீஸ்வரர் சுவாமி வீதியுலாவும் நடந்தது.
வரும் 14ம் தேதி பிற்பகல் 3:00 மணியளவில் திருத்தேர் திருவிழா நடக்கிறது.ஆண்டுதோறும் வெகுவிமர்சையாக நடை பெறும் இந்த தேர்திருவிழாவில் திருக்கோவிலூர், சங்கராபுரம், கள்ளக்குறிச்சி உட்பட பல்வேறு பகுதியை சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்பர்.பொதுமக்களின் வசதிக்கேற்ப அரசு சார்பில்கூடுதல் பஸ்கள் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.