பெரியகுளம்:பெரியகுளம் கவுமாரியம்மன் கோயில் ஆனித்திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர்.
அறநிலையத்துறைக்கு உட்பட்ட பிரசித்திபெற்ற இக்கோயிலில் ஆனித்திருவிழா வுக்கு ஜூலை 2ல் சாட்டுதல் மற்றும் கம்பம் நடப்பட்டது. ஜூலை 8 ல் கொடியேற்றத்துடன் திருவிழா துவங்கி நடந்து வருகிறது. தினமும் மண்டகப்படிதாரர்கள் நடத்தும் நிகழ்ச்சியில் அம்மன் வெவ்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்துவரும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர் முக்கிய நிகழ்வான ஜூலை 16, 9ம் நாள் திருவிழாவில் அம்மனுக்கு மாவிளக்கு எடுத்தலும், 10ம் நாள் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அக்னிசட்டி எடுத்து அம்மனை வழி படுவர்.ஏற்பாடுகளை செயல்அலுவலர் அண்ணாதுரை, மண்டகப்படிதாரர்கள் செய்துள்ளனர்.