பதிவு செய்த நாள்
12
ஜூலை
2019
12:07
கம்பம்:கம்பம் வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம் மற்றும் நூற்றாண்டு விழா நேற்று (ஜூலை., 11ல்) காலை கோலாகலமாக நடந்தது.
கம்பம் ஆர்ய வைஸ்யாள் சமூகத்திற்கு பாத்தியப்பட்ட வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம் மன் கோயில் கட்டப்பட்ட நூறாண்டு விழா மற்றும் புனரமைப்பு, மகா கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்தனர். அதன்படி இந்த கோயிலில் உள்ள கணபதி, முருகன், சிவன், பார்வதி, நந்தீஸ்வரர், பெருமாள் லட்சுமிதாயார், நவக்கிரகங்கள் மற்றும் புதிதாக பிரதிஷ்டை செய்யப் பட்டுள்ள பிராமி, வைஷ்ணவி, விஷ்ணுதுர்க்கை ஆகிய தெய்வங்களுக்கும் நேற்று (ஜூலை., 11ல்) காலை மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
ஜூலை 8 ல் கணபதி ஹோமத்துடன் இதற்கான நிகழ்ச்சிகள் துவங் கியது. முதல் காலம், பூர்ணா ஹூதி, தீபாராதனை, இரண்டாம் நாள் கஜபூஜை, கோ பூஜை, அஸ்வ பூஜை நடைபெற் றது.
பல்வேறு புண்ணிய நதிகளிலிருந்து கொண்டு வரப்பட்ட தீர்த்த குடங்களுடன் அச் சமூகத் தினர் ஊர்வலமாக வந்தனர். மூன்றாம் காலத்தில் வேதபாராயணம், புண்ணியாகவாஜனம், வாஸ்துபூஜை, வாஸ்து ஹோமம் நடைபெற்றது. நான்காம் காலம சூர்ய கும்ப பூஜை, மகா ருத்ரஹோமம், , ஐந்தாம் காலம் கன்னிகாபரமேஸ்வரி உற்சவ விக்கிரக பாவன அபிஷே கம்,லலிதா சகஸ்ரநாமம், அஷ்டலட்சுமி ஹோமம் நடைபெற்றது.
அன்று இரவு சுவாமிகளுக்கு கண் திறக்கப்பட்டது.நேற்று (ஜூலை., 11ல்) அதிகாலை அம்மன் சர்வ அலங்காரத்தில் எழுந்தருளினார். சிறப்பு அபிஷேக , ஆராதனை நடந்தது. அதைத் தொடர் ந்து கடம் புறப்பட்டு, காலை 9:30 மணியளவில் வேதமந்திரங்கள் முழங்க ஆயிரக் கணக்கான பக்தர்கள் ’ஓம் சக்தி, பராசக்தி’ என கோஷமிட கலசங்களில் புனிதநீர் ஊற்றி மகாகும்பாபிேஷ கம் நடைபெற்றது. நாமகிரிப்பேட்டை மணிகண்ட அனந்தநாராயணன் சுவாமிகள் நடத்தி வைத்தார். பின்னர் மகா அபிஷேகத்தை அர்ச்சகர் பாலசுப்ரமணியன் நடத்தினார்.
இந்நிகழ்ச்சிகளில் தலைவர் பி.தியாகராஜன், கெளரவ தலைவர் எஸ்,.டி.பி.மோகன் தாஸ், பரம்பரை தர்மகர்த்தா டி.கார்த்திகேயன் மற்றும் டிரஸ்டிகள் வேலுச்சாமி, ரமேஷ், சரவணக் குமார்,சீனிவாசன், மணிகண்டன் மற்றும் வி.எஸ்.ஏ.திருமூர்த்தி, ஜி.வெங்க டேசன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பங் கேற்றனர். ஏற்பாடுகளை கம்பம் ஆர்யவைஸ்ய மகாசபா மற்றும் வாசவி மகிளா விபாக் செய்திருந்தது. இந்த நிகழ்ச்சியில் கம்பம் ஜமாத் நிர்வாகிகள் பங்கேற் றனர். கோயில் வளாகத்தில் அவர்களுக்கு விழாக்குழு சார்பில் சால்வை அணிவித்து மரியா தை செய்யப்பட்டது. இது சமூக நல்லிணக்கத்தை பிரதிபலிப்பதாக இருந்தது.