திருவாடானை:திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் பிரதோஷ விழா நடந்தது. நந்தி பகவான் வெள்ளி கவசத்தால் அலங்கரிக்கபட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார். மஞ்சள், பால், பன்னீர், பஞ்சாமிர்தம் போன்ற பல்வேறு வகையான அபிஷேகங்கள் நடந்தன. ஏராளமான பக்தர் கள் கலந்து கொண்டு தேவாரம், திருவாசகம் போன்ற பக்தி பாடல்களை பாடினர்.
அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. தொண்டி சிதம்பரேஸ்வரர், திருவெற்றியூர் வன்மீகநாதர், தீர்த்தாண்டதானம் சகலதீர்த்தமுடையவர் கோயில்களிலும் பிரதோஷ விழா நடந்தது.