பதிவு செய்த நாள்
15
ஜூலை
2019
03:07
திருத்தணி:திரவுபதியம்மன் கோவிலில், நேற்று (ஜூலை., 14ல்), துரியோதனன் படுகளம் மற்றும் தீமிதி விழா நடந்ததுதிருத்தணி அடுத்த, தும்பி குளம் கிராமத்தில் உள்ள திரவுபதியம்மன் கோவிலில், 2ம் தேதி, கொடியேற்றத்துடன் விழா துவங்கியது.
திரவுபதி மற்றும் சுபத்திரை அம்மன் திருக்கல்யாணம், அர்ஜுனன் தபசு நிகழ்ச்சி நடந்தது.நேற்று (ஜூலை., 14ல்) காலை, 10:00 மணிக்கு, துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, திரளான பெண்கள், கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து வழிபட்டனர்.மதியம், அக்னி குண்டத்தில் தீ முட்டல் நிகழ்ச்சியும், மாலை, 6:30 மணிக்கு, 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்து தீமிதித்தனர்.இரவு, 8:30 மணிக்கு, உற்சவர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.