அம்பிகைக்கு’துர்கை’ என்றொரு பெயருண்டு.’துர்கம்’ என்றால்’வழி’ அல்லது’கோட்டை’. நல்வழி காட்டுபவளாகவும், கோட்டை போல தீமையை தடுப்பவளாகவும் இருக்கிறாள் என்பது இதன் பொருள். சிவனின் கையில் சூலமாக நின்று அசுரர்களை அழித்தவள் என்பதால் ’சூலினி’ என அழைக்கப்பட்டாள். சூரபத்மனை அழிக்க, முருகன் புறப்பட்ட போது, தன் ஆற்றலை வேலாக்கி கொடுத்தாள். ஆயுதமாக நின்று அசுரர்களை அழித்தவள் அம்பிகையே.