ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியருக்கு ஆடிச்சீர் கொடுத்து புதுமாப்பிள்ளை, பெண்ணை தாய் வீட்டிற்கு அழைத்து விருந்து வைப்பர். அதன் பின் மாப்பிள்ளைக்கு ஆடிப்பால் என்னும் தேங்காய்ப்பால் கொடுத்து ஊருக்கு அனுப்புவர். தாய் வீட்டில் பெண் ஒரு மாதம் தங்குவாள். ஆடியில் கருத்தரித்தால் சித்திரையான கோடையில் குழந்தை பிறக்கும். இதனால் தாய், சேய் உடல் நலன் பாதிக்கலாம் என்பதால் இதை கடைபிடிக்கின்றனர். ஆடிப்பால் சாப்பிடாத மாப்பிள்ளையைத் தேடிப் பிடி என்ற சொலவடை கிராமங்களில் உண்டு.