பதிவு செய்த நாள்
20
ஜூலை
2019
02:07
அன்னுார்:அன்னுார், சிறுமுகை சாலை, கைகாட்டி நகரில், கருப்பராயசாமி கோவில் அருள் வாக்கு சொல்வதில் பிரசித்தி பெற்றது. ஐந்தாம் ஆண்டு தேர்த் திருவிழா நேற்று (ஜூலை., 19ல்) துவங்கியது.
பக்தர்கள் கரகம் எடுத்தபடி கோவிலுக்கு வந்தனர். இன்று (ஜூலை., 20ல்), பொங்கல் வைத்து, சுவாமி திருக் கல்யாண உற்சவம் நடக்கிறது. காலை 11:30 மணிக்கு, தேரோட்டம் துவங்கி, மதியம் 1:00 மணி க்கு, 108 கிடாய் வெட்டி விருந்து பரிமாறப்படுகிறது. அன்னுார் மன்னீஸ்வரர் கோவிலிலிருந்து, கருப்பராயர் கோவிலுக்கு 21ம் தேதி காலை முதல் மாலை வரை இலவச வாகன வசதி செய்யப்பட்டுள்ளது.