Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பிரசாதம் இது பிரமாதம் ஆடிவெள்ளி அலங்காரம்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
அதிக வரம் பெறலாம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 ஜூலை
2019
03:07

பராசக்தியே உலகிற்கு ஆதாரம் என்கிறார் மகாகவி பாரதியார். அண்ட வெளியில் கோள்கள் எல்லாம் ஆதாரம் ஏதுமின்றி  சுழல்வதாக நினைக்கிறோம். ஆனால் பராசக்தி என்னும் ஆதாரத்தால் அவை தன் பணிகளைச் செய்கின்றன. அது போல நாமும் நமக்குரிய தொழிலை செவ்வனே செய்ய வேண்டும். எந்த பாகுபாடும் தொழில்களில்  கிடையாது. உலகம் இயங்க எல்லாத் தொழில்களும் மிக அவசியம். துப்புரவு பணியாளர் ஒருநாள் வராவிட்டாலும் மறுநாள் சாலையில் யாரும் நடக்க முடியாது.  ”நீங்கள் எந்த தொழில் செய்தாலும், அதனைச் செவ்வனே செய்யுங்கள். உங்களைத் தவிர வேறு யாரும் இது போல செய்ய முடியாது என பிறர் பாராட்ட வேண்டும். எல்லாத் தொழில்களும் பராசக்தியுடையது. நாம் அதைச் செய்வதன் மூலம் அவளின் கையில் ஒரு கருவியாக இருக்கிறோம்.

பரபரப்பான இன்றைய சூழலில் “எப்படி இருக்கிறீர்கள்?” என கேட்டால் “ ஏதோ ஓடுகிறது” என்றே பதில் வருகிறது. ஆனால் சிலர்,  “பரவாயில்லை’  “யார் கிட்ட சொல்றது? “என்ன கிண்டலா?”  “என்னையப் பாத்தா எப்படி தோணுது?” என்று கோபம், கிண்டல் கலந்து பதிலளிக்கின்றனர். “ நன்றாக இருக்கிறேன். அதற்காக கடவுளுக்கு நன்றி சொல்கிறேன்!” என்று சொல்பவர் ஆயிரத்தில் ஒருவர் மட்டுமே. துன்பமே இயற்கை எனப் புலம்புவோர் மத்தியில் “இன்பமே எந்நாளும் துன்பமில்லை” எனச் சொல்லிப் பழக வேண்டும். அனைவருக்கும் நேர்மறை எண்ணம் இருந்தால் எங்கும் இன்பம் காணலாம். வாழ்வதற்கான சூழல் இல்லாத நிலையிலும்  மகாகவி பாரதியார் “எத்தனை கோடி இன்பம் வைத்தாய் என் இறைவா!” என பாடினார் என்றால் அவரது நம்பிக்கைக்கு அளவு உண்டா என்ன? அதற்கு என்ன வேண்டும்? நம்பிக்கை. எங்கும் கண்காணிப்புக் கேமராக்கள் இருக்கும் சூழலில் வாழும் நாம், யாரைப் பார்த்தாலும் சந்தேகப்படுகிறோம். பக்கத்தில் இருப்பவன் திருடனோ? என ஒவ்வொருவரும் நினைக்கிறார்கள்.

முதலில் நம்மிடம் நம்பிக்கை. பிறகு கடவுளிடம் நம்பிக்கை. நம்பியவர்கள் என்றும் கெடுவதில்லை என உரக்கச் சொல்கின்றன வேதங்கள். ’எங்கும் எதிலும் எந்நாளும் இன்பமே’  என்று சொல்லி பழகுவோம். அதுவே உண்மை. அந்நிலையை அருளும் தேசமுத்து மாரியைச் சரணடைவோம். அவளிடம் அதிக வரம் பெற்று, ஒவ்வொரு நாளையும் உற்சாகமாகவும், வெற்றியாகவும் ஆக்குவோம்.

ஆதாரம் சக்தியென்றே அருமறைகள் கூறும்

யாதானுந் தொழில் புரிவோம்: யாதுமவள்   தொழிலாம்
துன்பமே இயற்கை எனும் சொல்லை மறந்திடுவோம்
இன்பமே வேண்டி நிற்போம்: யாவுமவள் தருவாள்
நம்பினார் கெடுவதில்லை   நான்குமறை தீர்ப்பு
அம்பிகையைச் சரண் புகுந்தால் அதிக வரம் பெறலாம்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

தக்வா ஏப்ரல் 24,2026

தோழர்களிடம் பேசிக் கொண்டிருந்தார் உமர் (ரலி). அப்போது அங்கு வந்த ஒருவர் உமரிடம், ‘‘தக்வா என்றால் ... மேலும்
 

அதிசயம் ஏப்ரல் 24,2026

உசைத் பின் ஹுளைர் என்பவர் இரவில் வீட்டில் இருந்தார். அப்போது குர்ஆனில் உள்ள 2ம் அத்யாயமான ‘அல்பகரா’ ... மேலும்
 

எது மகிழ்ச்சி ஏப்ரல் 24,2026

முகமது இக்பால் சொந்தமாக பல கப்பல்கள் வைத்திருந்தார். சம்பாதிப்பது மட்டுமே குறிக்கோளாக ... மேலும்
 

நம்மவர் ஏப்ரல் 24,2026

இஸ்ரேலில் யூதர்கள், சமாரியர்கள் என இரண்டு இனத்தவர்கள் வாழ்ந்தனர். சமாரியர்களை பார்ப்பதையோ, ... மேலும்
 

பணம் யாருக்கு ஏப்ரல் 24,2026

கோபக்காரனான பவுலும், பொறுமைசாலியான ஜானும் சகோதரர்கள். கட்டட தொழிலாளர்களான இருவரும் அவசர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar