யானை தும்பிக்கையை நீட்ட, அதில் காசை வைத்து பக்தர்கள் ஆசி பெறுவர். இப்படி செய்தால் கடவுளின் அருள் கிடைக்கும் என நம்புகின்றனர். இதற்கு பதிலாக அரிசி, வெல்லம், பழங்கள், கீரைகள் சாப்பிடக் கொடுக்கலாம். யானையின் நெற்றியில் மகாலட்சுமி வாசம் செய்வதால் அதை கை குவித்து வணங்கலாம். இதனால் யானைக்கு உணவளித்த புண்ணியமும், விநாயகர் ஆசியும், லட்சுமி கடாட்சமும் கிடைக்கும்.