Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அமர்நாத் யாத்திரை: குவியும் மக்கள் சதுரகிரி ஆடி அமாவாசை பக்தர்களுக்கு ’அம்மா’ குடிநீர் சதுரகிரி ஆடி அமாவாசை பக்தர்களுக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆக. 1 முதல் நின்ற கோலத்தில் அத்தி வரதர் தரிசனம்: இ.பி.எஸ்.,
எழுத்தின் அளவு:
ஆக. 1 முதல் நின்ற கோலத்தில் அத்தி வரதர் தரிசனம்: இ.பி.எஸ்.,

பதிவு செய்த நாள்

24 ஜூலை
2019
11:07

காஞ்சிபுரம்,:”ஆக., 1முதல்,அத்திவரதர் நின்ற கோலத்தில், அருள் பாலிப்பார்,”  என, முதல்வர், இ.பி.எஸ்., காஞ்சிபுரத்தில் தெரிவித்தார்.

ஆக. 1 முதல் நின்ற கோலத்தில் அத்தி வரதர் தரிசனம்: இ.பி.எஸ்., பேட்டி

காஞ்சிபுரம், வரதராஜ பெருமாள் கோவிலில், அத்திவரதர் வைபவம் வெகு  விமரிசையாக நடந்து வருகிறது. அத்திவரதரை தரிசிக்க, நாள்தோறும்,  லட்சக்கணக்கில் பக்தர்கள் வந்த படியே உள்ளனர்.

கூட்ட நெரிசலில் சிக்கி,  இதுவரை, ஐந்து பேர் இறந்துள்ளனர்.இதையடுத்து, தமிழக அரசு, இந்த  விவகாரத்தில் கவனம் செலுத்த துவங்கியுள்ளது. ஏற்கனவே, தலைமை செயலர்  சண்முகம் ஆய்வு கூட்டம் நடத்தி, அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியிருந்தார்.

இந்நிலையில், முதல்வர், இ.பி.எஸ்., நேற்று இரவு, 7:00  மணிக்கு, காஞ்சிபுரம், ஓரிக்கை தற்காலிக பஸ் நிலையத்திற்குவந்து, ஆய்வு நடத்தினார். பின், வரதராஜ பெருமாள் கோவிலுக்கு சென்று,  அத்திவரதரை தரிசனம் செய்தார்.

ஆலோசனை

வரிசையில் நின்றிருந்த பக்தர்களிடையே, அடிப்படைவசதிகள் குறித்து, முதல்வர்  கேட்டறிந்தார். இரவு, 8:40 மணிக்கு, கலெக்டர் அலுவலகத்தில், அனைத்து துறை  அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தினார். தலைமை செயலர் சண்முகம், டி.ஜி.பி.,  திரிபாதி, துறை செயலர்கள், கலெக்டர் பொன்னையா உட்பட பலர் பங்கேற்றனர்.

பின், இ.பி.எஸ்., அளித்த பேட்டி:அத்திவரதர் வைபவத்துக்கு தேவையான  அனைத்து ஏற்பாடு களையும், மாவட்ட நிர்வாகம் செய்து கொடுத்துள்ளது. மேலும்,  தேவையான வசதிகள் குறித்து, ஆலோசனை செய்துள்ளோம். சயன கோலத்தில்  அருள் பாலிக்கும் அத்திவரதர், ஆக., 1 முதல், நின்ற கோலத்தில் அருள்  பாலிப்பார்.ஆகம விதிப்படி, வசந்த மண்டபத்திலே யேஅருள் பாலிப்பார். பாதுகாப்பு  வசதிக்காக, ஒரு ஐ.ஜி., தலைமையில், ஏழு, எஸ்.பி.,க்கள், எட்டு கூடுதல் காவல்  கண்காணிப்பாளர்கள், 40 துணை காவல் கண்காணிப்பாளர்கள், 5,100

காவலர்கள், சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனர். ஒன்பது காவல் உதவி  மையங் களும், 46 கேமராக்களும் அமைக்கப்பட்டுள்ளன.

பக்தர்களுக்கு வசதி

மூன்று, தற்காலிக பஸ் நிலையங்களும், 40 மினி பஸ்களும், பக்தர்கள்  வசதிக்காக ஏற்படுத் தப்பட்டுள்ளன. 14 சிறப்பு மருத்துவ முகாம்கள், 20 நடமாடும்  முகாம்கள், 28 ஆம்பு லன்ஸ்கள், 200 மருத்துவர்கள், பக்தர்களுக்காக எப்போதும்  தயாராக உள்ளனர்.

ஐந்து தீயணைப்பு வாகனங்களில், மீட்பு படையினர் உள்ளனர்.  இவை தவிர, விரைவு தரிசனத் துக்கு, 2,000 பக்தர்கள், ஒரு நாளைக்கு  அனுமதிக்கப்படுகின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அயோத்தி: அயோத்தி ராமர் கோயிலில் இன்று ஏகாதசியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவில் ... மேலும்
 
temple news
பாலக்காடு; கேரளாவில் பிரசித்தி பெற்ற கோவில் திருச்சூர் வடக்குநாதர் கோவில். இங்கு எல்லா ஆண்டு சித்திரை ... மேலும்
 
temple news
பெரியகுளம்; பெரியகுளம் ஷீரடி சாய்பாபா கோயிலில் சாய்பாபா பிறந்தநாள் விழா மற்றும் ராம நவமி விழா நடந்தது. ... மேலும்
 
temple news
திருப்பதி; திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள் பணம் மற்றும் நகை என காணிக்கையை கொட்டி ... மேலும்
 
temple news
கோவை; கோவை மாவட்டம் அன்னூர் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் சித்திரை மாதம் ஏகாதசியை முன்னிட்டு கோவிலில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar