மானாமதுரை : மானாமதுரை ரயில்வே காலனி ஷீரடி சாய்பாபா கோவிலில் குருபூர்ணிமா பூஜையை முன்னிட்டு 108 கலசங்களில் புனித நீர் வைத்து அபி ஷேகம் செய்யப்பட்டது. சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. பாபா மெட்ரிக் பள்ளி நிறுவனர் ராஜேஸ்வரி, தாளாளர் கபிலன், ஒருங்கிணைப்பாளர் மீனாட்சி உள்ளிட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.