திருப்புத்துார் : திருப்புத்துார் அருகேயுள்ள என்.வைரவன்பட்டியில் வடிவுடையம்பாள் சமேத வளரொளிநாதர் கோயிலில் நாளை (ஜூலை., 25ல்) காலை வயிரவசுவாமி பிரம்மோற்ஸவம் துவங்குகிறது.
இக்கோயிலில் ஆடி மாதத்தில் 11 நாட்கள் இந்த உற்ஸவம் நடைபெறும். நாளை (ஜூலை., 25ல்) காலை 7:15 மணிக்கு அனுக்ஞை மற்றும் கணபதி ஹோமத்துடன் பூஜைகள் துவங்கு கின்றன. தொடர்ந்து மாலை காப்புக்கட்டி இரவு 7:00 மணிக்கு சுவாமிக்கு தீபாராதனை நடைபெறும். ஜூலை 26 காலை 7:00 மணிக்கு யாகசாலை பூஜைகள் துவங்குகின்றன.
காலை 9:00 மணிக்கு வெள்ளி ரதத்தில் வயிரவர் புறப்பாடும்,இரவு 9:00 மணிக்கு சிம்ம வாகனத்தில் வயிரவர் திருவீதி புறப்பாடும் நடைபெறும்.
தினசரி காலையில் வெள்ளி ரதத்தில் சுவாமி புறப்பாடு, இரவில் வாகனங்களில் திருவீதி உலா நடைபெறும். ஜூலை 27 மாலை 4:30 மணிக்கு தேர் வடம் பிடித்தலும், ஜூலை 28 காலை தீர்த்தவாரியும், இரவில் பூப்பல்லக்கும், ஜூலை 29 காலையில் பஞ்சமூர்த்திகளுக்கு அபிஷே கம், இரவில் திருக்கல்யாணம் நடைபெறும். ஏற்பாட்டினை வயிரவன் கோயில் நாட்டுக் கோட்டை நகரத்தார் செய்கின்றனர்.