Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பெரியகுளம் கவுமாரியம்மன் கோயிலில் ... உத்திரமேரூர் அருகே, 1,200 ஆண்டுகளுக்கு முந்தைய நடுகல் வீரன் சிலை உத்திரமேரூர் அருகே, 1,200 ஆண்டுகளுக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சமுதாய பணியில் துறவியரின் பங்களிப்பு அவசியம்
எழுத்தின் அளவு:
சமுதாய பணியில் துறவியரின் பங்களிப்பு அவசியம்

பதிவு செய்த நாள்

25 ஜூலை
2019
12:07

மதுரை : ”இறைவழிபாட்டுடன் சமுதாய சீர்திருத்தப் பணிகளிலும் துறவியர் ஈடுபட வேண்டும்,”  என விஸ்வ ஹிந்து பரிஷத் சர்வதேச தலைவர் மிலின் பரேண்டே வேண்டுகோள் விடுத்தார்.

மதுரையில் அகில பாரதிய சன்னியாசிகள் சங்கம் சார்பில் வைகை பெருவிழா நேற்று (ஜூலை., 24ல்) துவங்கியது. பேரூராதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் தலைமை வகித் தார். கோவிலுார் ஆதினம், விழாக்குழு நிர்வாகிகள் சுவாமிகள் சிவானந்த சுந்தரானந்தா, ராமானந்தா, சாஸ்வதானந்தா, சிவயோகானந்தா, சாதனா குழுமப் பள்ளிகள் இயக்குனர் நடனகுருநாதன் முன்னிலை வகித்தனர்.விஸ்வ ஹிந்து பரிஷத் சர்வதேச தலைவர் மிலின் பரேண்டே பேசியதாவது: இயற்கையை வழிபடும் பாரம்பரியத்தை ரிஷிகள், முனிவர்கள் நமக்கு கற்று கொடுத்துள்ளனர்.

இமயமலை, திருவண்ணாமலை, மரங்கள், நதிகள் போன்ற இயற்கையை போற்றுவதும், இறைவனாக கருதி வணங்குவதும் ஹிந்துக்களின் பாரம்பரியம். இயற்கையை புனிதமாக கருதும் பழக்க வழக்கம் பல ஆயிரம் ஆண்டுகளாக கடைப்பிடிக்கப்படும் ஹிந்துக்களின் தொன்மையான பாரம்பரியம்.இவற்றை மக்கள் மறந்து விடக்கூடாது, என்பதற்காக இது போன்ற மாநாடுகள் நடத்தி இயற்கையின் புனிதம் காக்கும் முயற்சிகள் தொடர வேண்டும். தேச மேம்பாட்டுக்காக ரிஷிகள், மகான்கள் பாடுபட்டனர்.

அந்த வரிசையில் ராமானுஜர், நாராயணகுரு உள்ளிட்ட முன்னோர்கள் விட்டு சென்ற இயற்கை வழிபாட்டு முறைகளை நாம் பின்பற்ற வேண்டும். இறை வழிபாட்டுடன் சமுதாய சீர்த்திருப் பணிகளிலும் துறவியர் ஈடுபட வேண்டும், என்றார்.திருவாவடுதுறை ஆதீனம், ஓய்வு ஐ.ஏ.எஸ்., அதிகாரி ராஜேந்திரன், விழாக்குழு நிர்வாகிகள் வேதாந்த ஆனந்தா, ஸ்ரீநிவாசன், பாலாஜி, ராஜன், பல்வேறு மடாலய குரு மகா சன்னிதானங்கள் கலந்து கொண்டனர். பிற்பகலில் துறவியர் மாநாடு நடந்தது. ஆக.,3 ஆடி பெருக்கில் ஒரு லட்சம் பேர் வைகையில் சிறப்பு தீர்த்தமாடும் நிகழ்ச்சி நடக்கிறது. இதற்காக தற்காலிகமாக, ஏழு புனித கிணறுகள் அமைக்கப் பட்டுள்ளன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் மங்களாசாசனம் செய்ய, சங்கரமடத்தின் மடாதிபதி ... மேலும்
 
temple news
செஞ்சி; செஞ்சி அங்காளம்மன் கோவிலில் மயானக்கொள்ளை உற்சவம் நடைபெற்றது. செஞ்சி சத்திரத்தெரு ... மேலும்
 
temple news
 புவனகிரி: அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் தேரோட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.புவனகிரியில், ... மேலும்
 
temple news
சென்னை; திருமலை, திருப்பதி வெங்கடேஸ்வர பெருமாள் கோவிலில், தினசரி அதிகாலை முதல் நள்ளிரவு வரை பல சேவைகள் ... மேலும்
 
temple news
பழநி; பழநி மாசி திருவிழா, மாரியம்மன் கோயிலில் கம்பத்தில் தீச்சட்டி வைக்கப்பட்டதை முன்னிட்டு பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar