Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பொள்ளாச்சி கோவில்களில் ஆடி வெள்ளி ... திருப்பூரில் அத்திவரதராக அருள்பாலித்த மாரியம்மன்:ஆடி வெள்ளி வழிபாடு கோலாகலம் திருப்பூரில் அத்திவரதராக ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உடுமலை சுற்றுப்பகுதியிலுள்ள அம்மன்கோவில்களில் ஆடி வெள்ளி
எழுத்தின் அளவு:
உடுமலை சுற்றுப்பகுதியிலுள்ள அம்மன்கோவில்களில் ஆடி வெள்ளி

பதிவு செய்த நாள்

03 ஆக
2019
02:08

உடுமலை:உடுமலை சுற்றுப்பகுதியிலுள்ள அம்மன் கோவில்களில், ஆடி மூன்றாம்  வெள்ளி யையொட்டி நடந்த, சிறப்பு பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து  கொண்டனர்.ஆடி மாதம் அம்மனுக்கு உகந்தது. மழை வேண்டியும், விவசாயம்  செழிக்கவும், சிறப்பு பூஜைகளும் இம் மாதத்தில் நடக்கிறது. உடுமலை, மாரியம்மன்  கோவிலில், அம்மனுக்கு, காலை, 6:00 மணி முதல் சிறப்பு அலங்காரம் நடந்தது.

பக்தர்கள், விளக்கு போடுவதும், வேண்டுதல்களை நிறைவேற்றியும் வழிபட்டனர்.  மாலை, இன்னிசை நிகழ்ச்சி நடந்தது. நேரு வீதி காமாட்சி அம்மன் கோவிலில்,  காலை, 7:00 மணி முதல், இரவு 8:00 மணி வரை, லட்சார்ச்சனை நடந்தது. இரவு,  7:30 மணிக்கு, கோ பூஜை சிறப்பு வழிபாடு நடந்தது.தளி ரோடு, காமாட்சி அம்மன்  கோவிலில், காலை, 11:00 மணிக்கு அம்மனு க்கு சிறப்பு அலங்கார பூஜை  நடந்தது. குறிஞ்சேரியில் சுயம்புவாக அவதரித்துள்ள பூமி லட்சுமி அம்மன்  கோவிலில், ஆடிவெள்ளியையொட்டி, அபிஷேக அலங்கார பூஜை  நடந்தது.

தென்னைமரத்து வீதி காமாட்சி அம்மன், சங்கிலி நாடார் வீதி பத்ரகாளியம்மன், குட்டைத் திடல் துர்க்கையம்மன், கல்பனா ரோடு காளியம்மன் கோவில்களிலும் ஆடிவெள்ளி சிறப்பு பூஜையையொட்டி, அம்பாள் வண்ண வண்ண பட்டு உடுத்தி சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார்.

ஆடி வெள்ளியில் பல்வேறு அலங்காரத்தில் பவனி வரும் அம்மனின் அருள்  வேண்டி, சுற்றுப் பகுதி அம்மன் கோவில்களில் திரளான பக்தர்கள் வழிபட்டனர்.  பக்தர்கள், விளக்கேற்றியும், மங்கள கயிறு, மஞ்சள் குங்குமம், வளையல்கள் என,  மங்கலப் பொருட்களை வழங்கியும், கூழ், பொங்கல் உள்ளிட்ட பிரசாதங்களை  படைத்தும் வழிபட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கீழக்கரை: உத்தரகோசமங்கை மங்களநாதர் கோயிலில் ஆருத்ரா தரிசன விழாவையொட்டி இன்று மரகத நடராஜருக்கு ... மேலும்
 
temple news
சிதம்பரம்: பூலோக கைலாசம் என்றழைக்கப்படும் சிதம்பரத்தில் அமைந்துள்ள நடராஜர் கோயில் சிவகாமசுந்தரி ... மேலும்
 
temple news
திருப்புவனம்; திருப்புவனம் அருகே லாடனேந்தல் பூங்காவனம் முத்துமாரியம்மன் கோயில் முன் முள்படுக்கையில் ... மேலும்
 
temple news
திருவெண்ணெய்நல்லூர்; திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள பையூர் தட்சணாமூர்த்தி கோவிலில் புத்தாண்டைய ... மேலும்
 
temple news
ஒட்டன்சத்திரம்; ஒட்டன்சத்திரம் அருள்மிகு குழந்தை வேலப்பர் மலை கோயிலை சுற்றி 108 விநாயகர் சிலைகள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar