Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அன்னுார் மாரியை பொழிபவளே... மாரியம்மா! உடுமலை சுற்றுப்பகுதியிலுள்ள அம்மன்கோவில்களில் ஆடி வெள்ளி உடுமலை சுற்றுப்பகுதியிலுள்ள ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பொள்ளாச்சி கோவில்களில் ஆடி வெள்ளி வழிபாடு: மஞ்சள், குங்குமம் பிரசாதம் வினியோகம்
எழுத்தின் அளவு:
பொள்ளாச்சி கோவில்களில் ஆடி வெள்ளி வழிபாடு: மஞ்சள், குங்குமம் பிரசாதம்  வினியோகம்

பதிவு செய்த நாள்

03 ஆக
2019
02:08

பொள்ளாச்சி:பொள்ளாச்சி, ஆனைமலை சுற்றுப்பகுதி அம்மன் கோவில்களில், ஆடி  வெள்ளி யை முன்னிட்டு, சிறப்பு வழிபாட்டில் பக்தர்கள் மனமுருகி  வழிபட்டனர்.ஆடி மாதம் அம்மனு க்கு உகந்த மாதமாக கொண்டாடப்படுகிறது.  அம்மன் கோவில்களில், ஆடி மாத வெள்ளிக் கிழமைகளில் சிறப்பு பூஜைகள்  நடத்தப்படும்.நேற்று (ஆக., 2ல்), மூன்றாவது ஆடி வெள்ளிக் கிழமையை முன்னிட்டு, கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில், அம்மனுக்கு சிறப்பு அலங்காரம்,  அபிஷேகம் வழிபாடு நடந்தது. அம்மனுக்கு நான்கு கால வழிபாடு  நடந்தது.கணபதிபாளையம் கவுமாரி பத்திரகாளியம்மன் கோவிலில், சந்தன  அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார். பக்தர் களுக்கு, மஞ்சள், குங்குமம்,  மஞ்சள் கயிறு பிரசாதமாக வழங்கப்பட்டது.கோட்டூர், பழனியூர் மாகாளியம்மன்  கோவிலில், அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. அம்மன் சந்தன  அலங்காரத்தில் அருள்பாலித்தார். கோட்டூர் கமல காமாட்சியம்மன் கோவிலிலும்  அம்மனுக்கு, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. நான்கு கால வழிபாடு  நடந்தது.சேத்துமடை தெய்வகுளம் காளியம்மன் கோவிலில், அம்மனுக்கு  அலங்கார வழிபாடு நடந்தது. மற்ற கோவில்களில் இருந்து சென்ற பக்தர்கள்,  தெய்வகுளத்தில் தீர்த்தம் எடுத்து, பூஜை செய்து அம்மனை வழிபட்டு, தீர்த்தம்  எடுத்து வந்தனர்.சூலக்கல் மாரியம்மன் கோவிலில் நேற்று (ஆக., 2ல்), அதிகாலை முதலே,  பெண்கள் கூட்டம் நீண்ட வரிசையில் அம்மனை தரிசிக்க காத்திருந் தனர்.

காலை, 7:30 மணிக்கு, திருநீரு, மஞ்சள், சந்தனம், குங்குமம், பஞ்சாமிர்தம், இளநீர்,  நல்லெண் ணைய் உள்ளிட்ட, 30 வகையான அபிஷேகம் நடந்தது. அதன்பின்,  அம்மனுக்கு மஞ்சள் காப்பு அணிவித்து, மலர் அலங்காரத்தில் சிறப்பு வழிபாடு  நடந்தது.பக்தர்களுக்கு, மஞ்சள், குங்கு மம், மஞ்சள் கயிறு, எலுமிச்சை மற்றும்  மலர்கள் பிரசாதமாக வழங்கப்பட்டது. பக்தர்களுக்கு நாள் முழுவதும்  அன்னதானம் வழங்கப்பட்டது.

பக்தர்கள் நேர்த்திக்கடனாக, கம்மங்கூழ் மற்றும் அன்னதானம் வழங்கினர்.

* வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவில் காசிவிஸ்வநாதர் சன்னதியில்  எழுந்தருளியுள்ள துர்க்கை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜையும்  நடந்தது.அண்ணாநகர் முத்து மாரியம்மன் கோவிலில் நேற்று (ஆக., 2ல்) மாலை, 6:00 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜை நடந்தது.எம்.ஜி.ஆர்.,நகர் மாரியம்மன்  கோவிலில் காலை, 6:00 மணிக்கு சிறப்பு அபிஷேக பூஜையும், 7:00 மணிக்கு  சிறப்பு அலங்காரபூஜையும் நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; ஆங்கில புத்தாண்டையொட்டி, திருவண்ணாமலை  அருணாசலேஸ்வரர் கோவிலில் அதிகாலை முதலே, ... மேலும்
 
temple news
புட்டபர்த்தி; புட்டபர்த்தி பிரசாந்தி நிலையத்தில் புத்தாண்டு கொண்டாட்டம் சிறப்பாக நடைபெற்றது. ... மேலும்
 
temple news
நாமக்கல்: ஆங்கில புத்தாண்டு முன்னிட்டு நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் மூன்று டன் பல்வேறு வகையான ... மேலும்
 
temple news
சென்னை: 2025 ம் ஆண்டு இனிதே நிறைவடைந்து 2026 ம் ஆண்டு பிறந்ததையொட்டி, மக்கள் உலகம் முழுவதும் புதிய ஆண்டை ... மேலும்
 
temple news
சின்னாளபட்டி; புத்தாண்டை முன்னிட்டு சின்னாளபட்டி சதுர்முக முருகன் கோயிலில் விஸ்வரூப தரிசனம் நடந்தது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar