திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நேற்று சிவகங்கை தீர்த்த குளத்தில், ஆடிப்பூரம் பிரம்மோற்சவம் நிறைவு விழாவையொட்டி, பராசக்தியம்மனுக்கு சூலம் ரூபத்தில் தீர்த்தவாரி நடந்தது. குளக்கரையில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பராசக்தியம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.