விருத்தாசலம் பழமலைநாதர் கோயிலில் நடைபெறும் ஆடித்திருவிழாவில் 8-ம் நாள் தேரோட்டமும், 9-ம் நாளான ஆடிப்பூரத்தன்று, பெண் அழைப்பு என்ற பெயரில் கண்ணாடிப்பேழையில் அம்மன் சிறப்பு அலங்காரத்துடன் எட்டு வீதிகளிலும் உலாவருதலும், 10-ம் நாள் காலை எட்டு மணிக்கு திருமண உற்சவமும் நடைபெறும். அப்போது பெண்வீட்டார், மாப்பிள்ளை வீட்டார் என ஊர் பொதுமக்கள் இரண்டாகப் பிரிந்துதிருமணச்சடங்குகளைச் செய்வது கண் கொள்ளாக் காட்சி!