Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சூலுார் ஆடி வெள்ளி அம்மன் ... சிவகங்கை மகாமாரியம்மன் கோயிலில் 508 திருவிளக்கு பூஜை சிவகங்கை மகாமாரியம்மன் கோயிலில் 508 ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உடுமலையில், ஆடி வெள்ளி அம்மன் கோவில்களில் கோலாகலம்
எழுத்தின் அளவு:
உடுமலையில், ஆடி வெள்ளி அம்மன் கோவில்களில் கோலாகலம்

பதிவு செய்த நாள்

17 ஆக
2019
01:08

உடுமலை:உடுமலையில், ஆடி மாத கடைசி வெள்ளியையொட்டி, கோவில்களில்,  சிறப்பு பூஜைகள் நடந்தன. சுவாமிகள், சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர்.ஆடி  மாதம் அம்மன் மனம் குளிர்ந்து அருள் புரிய, கோவில்களில் சிறப்பு பூஜைகள்  நடக்கிறது. இம்மாதத்தின் கடைசி வெள்ளியான நேற்று (ஆக., 16ல்) சிறப்பு பூஜைகள் நடந்தன.கோவில்களில் எழுந்தரு ளியுள்ள அம்மன் பல்வேறு சிறப்பு  அலங்காரங்களில் அருள்பாலித்தனர்.

உடுமலை மாரியம்மன் கோவிலில், அம்மன் வளையல், மஞ்சள் சரடு என சிறப்பு  அலங்கார த்தில் எழுந்தருளினார். தென்னை மரத்துவீதி காமாட்சியம்மன், மஞ்சள்  பட்டுடுத்தி பக்தர் களுக்கு அருள்பாலித்தார்.சதாசிவம் வீதி தலை கொண்டம்மன்  கோவிலில், அம்மன் மஞ்சள் காப்பு, நவரத்தின கிரீடம், வளையல் அலங்காரத்தில்  பக்தர்களுக்கு அற்புத காட்சியளித்தார். கல்பனா ரோடு காளியம்மன் கோவிலில்,  பச்சை பட்டுடுத்தி, மலர் அலங்காரத்தில் அம்பாள் எழுந்தருளினார்.

சீனிவாசா வீதி உச்சிமாகாளியம்மன் வளையல், கிரீடம், மாலை அணிந்து சிறப்பு  அலங்கார த்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சங்கிலிவீதி பத்ரகாளியம்மன்  கோவிலில், அம்மன் பிருத்யங்கரா தேவி அலங்காரத்தில் எலுமிச்சை மாலை  அணிந்து சிவப்பு பட்டுடுத்தி, நவர த்தின ஆபரணங்கள் அணிந்து எழுந்தருளினார்.  மேலும், அம்மன் கோவில்களில் ஆடி கடைசி வெள்ளியை முன்னிட்டு, சிறப்பு  பூஜைகள், அலங்கார பூஜைகள் நடந்தன. ஏராளமான பெண் கள் விரதமிருந்து  அம்மனை வழிபட்டனர்.பெண்கள் விளக்கேற்றியும், தாலி கயிறு, மஞ்சள்  குங்குமம், வளையல்கள் என மங்கலப் பொருட்களையும் வழங்கி வழிபட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 71வது மடாதிபதி சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, சோற்றுத்துறை நாதர் கோவிலில் இன்று சுவாமி திருக்கல்யாணம் நடந்தது. ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: ஆண்டுதோறும் சித்திரை மாதம் வளர்பிறையில் அமாவாசைக்குப் பிறகு வரும் 3வது திதியான அட்சய ... மேலும்
 
temple news
மதுரை: கேரளம் மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்திலுள்ள காலடி ஸ்ரீ கிருஷ்ணன் கோயிலில் அட்சய திருதியை விழாவை ... மேலும்
 
temple news
திண்டுக்கல்: திண்டுக்கல் நகரில் அபிராமி அம்மன்உடனமர் காளஹஸ்தீஸ்வரர், ஞானாம்பிகை உடனமர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar