பதிவு செய்த நாள்
22
ஆக
2019
01:08
திருப்பூர்:விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டம் குறித்து, மாவட்ட நிர்வாகம் தெளிவான அறிவிப்பு வெளியிட வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது. விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, பொது இடங்களில், தற்காலிகமாக சிலைகள் வைத்து வழிபாடு நடத்தப்படுகிறது.
புதிய விதிமுறைகள் குறித்து, மாவட்ட நிர்வாகமோ, போலீசோ தெளிவான அறிவிப்பை வெளியிடவில்லை.மாறாக, ’உரிய அலுவலர்களிடம் தடையின்மை சான்று பெற்று, போலீஸ் உதவி கமிஷனர் அல்லது ஆர்.டி.ஓ.. அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். முன் அனுமதி பெற்ற பிறகே, சிலை வைக்க வேண்டும்’ என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
இவ்வாறு, தெளிவில்லாத அறிவிப்பால், விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடும் அமைப்பினர், குழப்பம் அடைந்துள்ளனர்.எனவே, அமைதியான முறையில் விழாவை கொண்டாட, மாவட்ட நிர்வாகம், விதிமுறைகளை தெளிவாக முன்னறிவிப்பு செய்ய வேண்டுமென, இந்து இயக் கத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.