பதிவு செய்த நாள்
22
ஆக
2019
01:08
காஞ்சிபுரம் : அத்தி வரதர் வைபவத்திற்காக, காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் வைக்கப்பட்ட சிறப்பு உண்டியல்களில் இருந்து, 10.60 கோடி ரூபாய் காணிக்கையாக கிடைத் துள்ளது.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும், அத்தி வரதர் வைபவம், ஜூலை, 1ம் தேதி முதல், ஆக., 17ம் தேதி வரை நடந்தது. இந்த வைபவத்தை காண வந்த பக்தர்கள், காணிக்கை செலுத்துவதற்கு வசதியாக, கோவிலில், 18 சிறப்பு உண்டியல்கள் வைக்கப்பட்டன. இவற்றில், பக்தர்கள் செலுத்திய காணிக்கை அனைத்தும், நேற்று ஆக., 21ம் தேதி, ஹிந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் முன்னிலையில் எண்ணப்பட்டது. மொத் தம், 10.60 கோடி ரூபாயும், 165 கிராம் தங்கமும், 5,339 கிராம் வெள்ளியும், பக்தர்களின் காணிக் கையாக கிடைத்துள்ளன.