பதிவு செய்த நாள்
23
ஆக
2019
12:08
திருப்பூர்: திருப்பூர் வேணுகோபால கிருஷ்ண சுவாமி கோவிலில், கிருஷ்ண ஜெயந்தி உற்சவ விழா, கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கிருஷ்ணர் அவதரித்த தினமான, ஆவணி மாதம் தேய்பிறை அஷ்டமி தினமான இன்று கிருஷ்ண ஜெயந்தி விழா, விமரிசையாக கொண்டாடப்பட்டது.
திருப்பூர், ராயபுரம் கிருஷ்ணன் கோவிலில், கடந்த சில நாட்களாக பஜனை, ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன. கோகு லாஷ்டமியை ஒட்டி, வெண்ணைத்தாழி அலங்காரத்தில் கிருஷ்ணர் அருள்பாலித்தார், பக்தர்கள் துளசி மற்றும் வெண்ணையை எடுத்து வந்து, கிருஷ்ணருக்கு சமர்ப்பித்து, வழிபட்டனர். திருப்பூரில் உள்ள கிருஷ்ணன் கோவில், பாண்டுரங்கன் கோவில், வீரராகவப் பெருமாள் கோவில் மற்றும் ஆஞ்சநேயர் கோவில்களில், சிறப்பு வழிபாடு நடைபெற்றது.