பதிவு செய்த நாள்
23
ஆக
2019
02:08
செங்கல்பட்டு:செங்கல்பட்டில் உள்ள சின்னமுத்துமாரியம்மன் கோவில் குளத்தை சீரமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.செங்கல்பட்டு, ஜி.எஸ்.டி., சாலை அருகில், புகழ் பெற்ற சின்னமுத்துமாரிஅம்மன் கோவில், ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ளது.
இங்குள்ள, கோவில் குளம், 30 ஆண்டுகளுக்கு முன் துார்வாரல், கரைகள் சீரமைப்பு உள்ளிட்ட பணிகள் நடந்தன. தற்போது, கோவிலில் திருப்பணி நடக்கிறது.
இந்நிலையில், சில தினங்களாக பெய்த மழையில், குளத்தின் ஒரு பகுதி கரை இடிந்து விழுந்து உள்ளது.குளக்கரையோரம் கோவில் இருப்பதால், திருப்பணி மேற்கொள்ள முடியாத நிலை உள்ளது. காரணம், சேத குளக்கரை அதிகமாகி கொண்டே சென்றால், கோவில் அடிப்பகுதி யில், மண் அரிப்பு ஏற்படும்.எனவே, குளக்கரையை சீரமைத்த பின், கோவில் திருப்பணியை மேற்கொள்ள வேண்டும் என, பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.
இது குறித்து, கோவில் செயல் அலுவலர், சோ. செந்தில்குமார் கூறியதாவது: சின்னமுத்து மாரிஅம்மன் கோவில் குளத்தின் ஒரு பகுதி கரை உடைந்து உள்ளதை சீரமைக்க, 15 லட்சம் ரூபாய் நிதி கேட்டு, அரசுக்கு கருத்துரு அனுப்பி உள்ளோம். நிதி கிடைத்தவுடன், பணியை விரைந்து துவக்க, நடவடிக்கை எடுக்கப் படும்.இவ்வாறு, அவர் கூறினார்.