பதிவு செய்த நாள்
26
ஆக
2019
12:08
திருப்பூர்: திருப்பூர், பிரிட்ஜ்வே காலனியில் உள்ள ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடம் சார்பில், 33வது ஆண்டு, ஆடிப்பூர பெருவிழா நடந்தது.கடந்த, 23ம் தேதி, முளைப்பாரி எடுத்தல்; 24ல், அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், கலச விளக்கு பூஜை, பூவோடு எடுக்கும் நிகழ்ச்சிகள் நடந்தன.முக்கிய நிகழ்ச்சியானபால் அபிஷேகம், கஞ்சிகலய அபிஷேகம் நேற்று, ஓம் சக்தி கோவிலில் நடந்தது. திருப்பூரில் உள்ள பல்வேறு வழிபாட்டு மன்றங்களில் இருந்து, பெண்கள் கஞ்சி கலயம் மற்றும் பால் குடங்களை ஊர்வலமாக, கோவிலுக்கு எடுத்து வந்தனர். பெண்கள், நீண்ட வரிசையில் காத்திருந்து, அம்மன் கருவறைக்குள் நேரடியாக சென்று பால் அபிஷேகம் செய்து, வழிபட்டனர்.