திருக்கோவிலூர்: திருக்கோவில் அடுத்த பரனூர் ராதிகாரமண பக்த கோலாகலனுக்கு கோவிந்த பட்டாபிஷேக வைபவம் நடந்தது. திருக்கோவிலூர் அடுத்த பரனூர் ராதிகாரமண பக்த கோலாகலன் கோவிலில் ஸ்ரீ ஜெயந்தி பிரம்மோற்சவ விழா கடந்த 24ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்றுகோவிந்த பட்டாபிஷேகம் நடந்தது. காலை 9:00 மணிக்கு ஸ்ரீராதிகாரமண பக்த கோலாகலன் ஆஸ்தானத்தில் இருந்து புறப்பாடாகி நந்தவன தோட்டத்தில் எழுந்தருளினார். ஸ்ரீ கிருஷ்ணப்ரேமி சுவாமிகள் தலைமையில் சுவாமிக்கு மகா அபிஷேகம், அலங்காரம், தீபாராதனையுடன் கோவிந்த பட்டாபிஷேக வைபவங்கள் நடந்தது. தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் விநியோகம், சுவாமி வீதி உலா நடந்தது. இரவு அனுமந்த வாகனத்தில் சுவாமி வீதி உலா நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வரும் 30ம் தேதி திருக்கல்யாண வைபவம், 1ம் தேதி காலை தேரோட்டம் நடக்கிறது. ஸ்ரீகிருஷ்ணப்ரேமி சுவாமிகள் உத்தரவின் பேரில் கோவில் நிர்வாகத்தினர் விழா ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.