பதிவு செய்த நாள்
03
செப்
2019
03:09
சிதம்பரம்: சிதம்பரம் தில்லை காளியம்மன் கோவிலில் நடந்த அமாவாசை அர்த்தஜாம பூஜையில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.சிதம்பரம் தில்லைக்காளி அம்மன் கோவிலில் அமாவாசை அர்த்தஜாம அபிஷேக மண்டலி சார்பில், ஆவணி மாத அமாவாசை யையொட்டி, சிறப்பு அர்த்தஜாம பூஜைகள், மகா அபிஷேகம், விநாயகர் மற்றும் பிரம்ம சாமுண்டி அம்மனுக்கு நெய் தீபம் வழிபாடும் நடந்தது.
தில்லைக்காளி அம்மனுக்கு குடம் நல்லெண்ணெய் அபிஷேக தைலக் காப்பு, பால், தயிர், பழம், வாசனை திரவியங்கள் போன்ற ஏராளமான பொருள்களால் மகா அபிஷேகம் நடந்தது.
தில்லை காளியம்மனுக்கு வெண்பட்டு சாற்றி, வெட்டிவேர், விளாமுச்சி வேர், செவ்வரளி பூவால், சிறப்பு அலங்காரத்தில் சிறப்பு அர்த்தஜாம பூஜைகள், மகா தீபாராதனை நடந்தன. இதில் ஆயிரக்கனக்கான பக்தர்கள் பங்கேற்றனர். பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.
தில்லை காளியம்மனுக்கு அமாவாசை அர்த்தஜாம பூஜை
பரங்கிப்பேட்டை: சிதம்பரம் தில்லை காளியம்மன் கோவிலில் நடந்த அமாவாசை அர்த்தஜாம பூஜையில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.சிதம்பரம் தில்லைக்காளி அம்மன் கோவிலில் அமாவாசை அர்த்தஜாம அபிஷேக மண்டலி சார்பில், ஆவணி மாத அமாவாசை யையொட்டி, சிறப்பு அர்த்தஜாம பூஜைகள், மகா அபிஷேகம், விநாயகர் மற்றும் பிரம்மசா முண்டி அம்மனுக்கு நெய் தீபம் வழிபாடும் நடந்தது.
தில்லைக்காளி அம்மனுக்கு குடம் நல்லெண்ணெய் அபிஷேக தைலக் காப்பு, பால், தயிர், பழம், வாசனை திரவியங்கள் போன்ற ஏராளமான பொருள்களால் மகா அபிஷேகம் நடந்தது.தில்லை காளியம்மனுக்கு வெண்பட்டு சாற்றி, வெட்டிவேர், விளாமுச்சி வேர், செவ்வரளி பூவால், சிறப்பு அலங்காரத்தில் சிறப்பு அர்த்தஜாம பூஜைகள், மகா தீபாராதனை நடந்தன. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். அன்னதானம் வழங்கப்பட்டது.