பொருள்: பிரம்மச்சர்ய விரதமிருந்து பயம் சிறிதும் இல்லாமல் அமைதியாக வாழ்பவனே யோகி. தியானத்தின் போது விழிப்புடன் இருக்கும் இவன், மன அடக்கமுடன் என்னையே எப்போதும் சிந்தித்தபடி இருக்கும் இவனுக்கு பேரானந்தம் கிடைக்கும். மிகுதியாக உண்பவனுக்கோ, பட்டினி கிடப்பவனுக்கோ, அதிக நேரம் தூங்குபவனுக்கோ, எந்நேரமும் விழித்திருப்பவனுக்கோ யோகநிலை கைகூடுவதில்லை.