Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
2,601 விநாயகர் சிலைகள் விழுப்புரம் ... செஞ்சி பக்த ஆஞ்சநேயர் கோவிலில் மகா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவண்ணாமலை 1,650 இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபாடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 செப்
2019
04:09

திருவண்ணாமலை: விநாயகர் சதுர்த்தி விழாவில், திருவண்ணாமலை  மாவட்டத்தில், 1,650 இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபாடு  நடத்தப்பட்டது.

விநாயகர் சதுர்த்தியை கொண்டாட மக்கள் அவல்பொரி, பழ வகைகள், சோளம்,  பூ, பூஜை பொருட்களை வாங்க, திருவண்ணாமலை கடைவீதியில், பொதுமக்களின்  கூட்டம் அலைமோதியது. இதனால், கடை வீதியில் காணும் இடமெல்லாம்,  மக்களின் தலையாகவே காட்சியளித்தது.

சாலையோரத்தில் விற்கப்பட்ட சிறிய மற்றும் பெரிய அளவிலான, விநாயகர் சிலைகளை, பொதுமக்கள் வாங்கிச்சென்றனர். இந்து அமைப்பினர், இளைஞர்கள் தங்கள் பகுதிகளில், சதுர்த்தியை கொண்டாட, மூன்று அடி முதல், 12 அடி வரை உள்ள விநாயகர் சிலைகளை வாங்கி சென்றனர். மாவட்டம் முழுவதும், 1,650 இடங்களில் சிலைகள் வைத்து வழிபாடு நடத்தப்பட்டது. பாதுகாப்பு பணியில், 1,500க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டனர். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு,  அருணாசலேஸ்வரர் கோவிலில், தங்கக்கொடி மரம் அருகில் உள்ள சம்மந்த  விநாயகருக்கு தங்கக்கவசம் சாத்தப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது. மாட வீதியில்  உள்ள இரட்டை பிள்ளையார் கோவிலில், சுவாமிக்கு தங்க கவசம் சாத்தப்பட்டு  வழிபாடு நடத்தப்பட்டது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

* விநாயகர் சதுர்த்தியையொட்டி வேலூர் மாவட்டத்தில், பலர் புதுமையான  முறையில் விநாயகர் சிலைகளை அமைத்துள்ளனர். ஆம்பூர், கிருஷ்ணாபுரம்  புதுத்தெருவில், சோளம், கம்பு, கேழ்வரகு, பச்சைப்பயறு, கோதுமை, நெல், மொச்சை  போன்ற தானிய வகைகளால், ஏழு அடி பசுமை விநாயகர் சிலை, அப்பகுதி  இளைஞர்கள் ஒன்று சேர்ந்து வடிவமைத்து ள்ளனர். சுற்றுச்சூழலை பாதிக்காத  வகையில், வடிவமைக்கப்பட்ட இந்த பசுமை விநாயக ருக்கு வரவேற்பு  கூடியுள்ளது. அதே போல, வேலூர் சைதாப்பேட்டை கன்னாரதெருவை சேர்ந்தவர்  கோபி, 34. இவர், 70 கிலோ எடைக்கு பழைய செய்தித்தாள்களை கொண்டு, 12  அடி உயரமுள்ள விநாயகர் சிலையை வடிவமைத்துள்ளார். எளிதில் கரையும்  தன்மையுள்ள இந்த சிலையை செய்ய, மூன்று நாட்கள் ஆனதாம். கிழங்குமாவை  கொண்டு வண்ணம் தீட்டப் பட்டுள்ள, இந்த விநாயகர் சிலையை ஏராளமான  மக்கள் பார்த்துச் சென்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி, ஏழுமலையான் கோயிலில் புரட்டாசி மாதம்  நான்காம் சனிக்கிழமை என்பதால்  இலவச தரிசனத்திற்கு 20 ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; புரட்டாசி மாதம்  கடைசி சனிக்கிழமையை ஒட்டி காஞ்சிபுரம் வரதராஜ பெருமாளை தரிசனம் செய்ய ... மேலும்
 
temple news
மகாபலிபுரம்; ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீசங்கரவிஜயேந்திரசரஸ்வதிசுவாமிகள், அக்., 3ல் ... மேலும்
 
temple news
மதுரை: தமிழக முக்கிய கோவில்களில் சுவாமி தரிசனத்திற்கு, ஆன்லைன் முன்பதிவு செய்யும் நடைமுறையை ஏற்படுத்த ... மேலும்
 
temple news
திருக்கோவிலுார்; திருக்கோவிலுார், கீழையூர் வீரட்டானேஸ்வரர் கோவிலில் பெரியானை கணபதிக்கு சங்கடஹர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar