Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பிரான்மலை கோயில் கும்பாபிஷேகம் ... சவுடேஸ்வரி அம்மனுக்கு ஆண்டு விழா பூஜை சவுடேஸ்வரி அம்மனுக்கு ஆண்டு விழா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மதுரையில் விநாயகர் சிலை ஊர்வலம்: வைகையாற்றில் கரைப்பு
எழுத்தின் அளவு:
மதுரையில் விநாயகர் சிலை ஊர்வலம்: வைகையாற்றில் கரைப்பு

பதிவு செய்த நாள்

05 செப்
2019
12:09

மதுரை, மதுரையில் 226 விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு வைகையாற்றில் கரைக்கப்பட்டன. மதுரை கீழமாசிவீதியில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலை ஊர்வலம் துவக்க நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட தலைவர் பரமசிவம், பொதுசெயலாளர் அழகர்சாமி முன்னிலை வகித்தனர்.

இணை அமைப்பாளர் பொன்னையா பேசியதாவது: ஆழ்வார்கள், நாயன்மார்கள் பிறந்த புண்ணிய பூமி தமிழகம். இந்து மதத்தை அவமதிக்கும் போக்கு தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. இதனை வேடிக்கை பார்க்காமல் தமிழக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். போலி மதச்சார்பற்ற கட்சிகள், அமைப்புகளால் நாட்டுக்கு பேராபத்து ஏற்பட்டுள்ளது என்றார். சிவபிரபாகர காமராஜ் சுவாமிகள், மாவட்ட அமைப்பாளர் தங்கம் வெங்கடேஷ் பேசினர். அரசரடி இல்லத்து பிள்ளைமார் சங்க செயலாளர் கல்யாணசுந்தரம், நாயுடுமகாஜன சங்க மாநில பொது செயலாளர் ரமேஷ், மருதுசேனை தலைவர் ஆதிநாராயணன் உள்பட பலர் பங்கேற்றனர். பின்னர், நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து எடுத்து வரப்பட்ட 226 சிலைகள் வாகனங்களில் ஊர்வலமாக புறப்பட்டன. சிம்மக்கல் அனுமார் கோயில் படித்துறை வைகை ஆற்றில் கரைக்கப்பட்டன. ஊர்வலத்தால் சிம்மக்கல், கோரிப்பாளையம் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

* திருமங்கலம்: திருமங்கலம் நகர், பச்சக்கோப்பன்பட்டி, சித்தாலை, மேலஉரப்பனுார் உட்பட திருமங்கலத்தின் பல்வேறு பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள், கக்கன் காலனி ஓடைப்பகுதியிலிருந் ஊர்வலமாக கிளம்பி ஆலம்பட்டி அருகே உள்ள கல்குவாரி பள்ளத்தில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன.  டி.எஸ்.பி.,க்கள் அருண், விஜய்குமார், இன்ஸ்பெக்டர் ராஜாமணி, விஜயா, விஜயகாண்டீபன், முத்துராமலிங்கம் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திண்டுக்கல்; தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட கோயில்களில் பைரவருக்கு சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு பைரவர் ... மேலும்
 
temple news
புதுடில்லி: புதுடில்லியில் புதுதில்லியில் விஜய யாத்திரை மேற்கொண்டிருக்கும் சிருங்கேரி ஸ்ரீ சாரதா ... மேலும்
 
temple news
பூட்டான்; பூட்டான், திம்புவில் உலகளாவிய அமைதி பிரார்த்தனை விழா நடக்கிறது. விழாவில் சாங்லிமிதாங் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்:  திருக்கல்யாண உத்சவம் நிறைவு நாளான நேற்று காஞ்சிபுரம் பாலதர்ம சாஸ்தா மலர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar