பதிவு செய்த நாள்
06
செப்
2019
12:09
சாயல்குடி: சாயல்குடி அங்காள ஈஸ்வரி அம்மன் கோயிலில் செப்.,11 காலை 9:00 மணிக்கு கும்பாபிஷேகம் நடப்பதால் காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது. பழமையும் புரதான சிறப்பும் பெற்ற அங்காள ஈஸ்வரி அம்மன் கோயில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது. முழுவதும் கருங்கற்களால் கட்டப்பட்டு அர்த்த மண்டபத்துடன் கோயில் அமைந்துள்ளது.
பாண்டிய மன்னர்களின் பிரசித்தி பெற்ற கோயில்கள் 14ல் 4வது ஸ்தலம் ஆப்பநாட்டில் 448 கிராமங்களை உள்ளடக்கியதாகும். கடந்தாண்டு பழைய கோயிலை அகற்றி விட்டு அதே இடத்தில் புதிதாக பழமை மாறாமல் திருப்பணிகள் செய்யப்பட்டுள்ளது. சாயல்குடி முக்குலத்தோர் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட விநாயகர், அங்காள ஈஸ்வரி அம்மன், அக்னி வீரபுத்திர சுவாமி, கருப்பண்ணசுவாமி உள்ளிட்ட புதிய விக்ரகங்களால் ஆன பரிவார தெய்வங்களுக்கு காலை 10:30 மணிக்கு சந்தனக்காப்பு அணிவிக்கப்பட்டது. இதையடுத்து காப்புக்கட்டுதலுடன் விழா துவங்கியது. முன்னதாக தண்ணீரில் வாசம், தானியத்தில் வாசம், செய்யப்பட்டு தங்கம், வெள்ளி நாணயங்களால் சந்தனக்காப்பு பூசப்பட்டது. விஷேச தீபாராதனைகள் நடந்தது.
பூஜைகளை டி.எம்.கோட்டை வெங்கடஷே் குருக்கள் செய்தார். மானாமதுரை ஸ்தபதி சண்முகம், ஜமீன்தார் சிவஞான பாண்டியன், தொழிலதிபர் மாடசாமித்தேவர், கோயில் கும்பாபிஷேக விழாக்குழுத்தலைவர் கருப்பையா, செயலாளர் வில்வலிங்கம், பொருளாளர் ஆசிரியர் சுந்தரராஜ், தொழிலதிபர் பாண்டித்தேவர், முத்திருளாண்டி, ஆப்பநாடு மறவர் சங்க துணை தலைவர் முனியசாமி, பார்வர்ட் பிளாக் வி.சுப்பிரமணியன், கூட்டுறவு சங்க தலைவர் செந்துார்பாண்டியன், சுப்பிரமணி, வில்வலிங்கம், சுமதி எஸ்.சரவணன், போஸ், தட்சிணாமூர்த்தி, ஒருங்கிணைப்பாளர் ராமர், கோயில் கணக்கர் ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை திருப்பணிக்குழுவினர், முக்குலத்தோர் உறவின்முறை சங்கத்தினர் செய்து வருகின்றனர்.