விருத்தாசலம்: விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் புனரமைப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் விபச்சித்து முனிவரால் பிரதிஷ்டை செய்யப்பட்டது. கண்டராதித்த சோழன் உள்ளிட்டோரால் ஐந்து கோபுரங்கள், ஐந்து பிரகாரம், ஐந்து நந்தி, ஐந்து தேர், பஞ்சமூர்த்திகள் என ஐந்தின் சிறப்புகளாக கட்டமைக்கப்பட்டுள்ளது.
இந்த கோவில் கடந்த 2002ல் புனரமைக்கப்பட்டு, கும்பாபிேஷகம் செய்யப்பட்டது. ஆகம விதிப்படி கோவில்கள் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிேஷகம் நடத்தப்பட வேண்டும். அதன்படி, கடந்த 2014ம் ஆண்டு முதல் கோவிலுக்கு கும்பாபிேஷகம் நடத்த மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து, கடந்தாண்டு 4.10 கோடியில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ள தமிழக அரசு ஒப்புதல் அளித்தது. இதையடுத்து, கடந்த ஒரு மாதத்திற்கு முன் உபயதாரர்கள் மூலம், கோவில் புனரமைப்பு பணிகள் துவங்கியது. இதில், தெற்கு கோபுர பணிகள் முடியும் தருவாயிலும், மற்ற பணிகளும் தீவிரமாக நடந்து வருகிறது.