முதுகுளத்துார் பூவந்தி அய்யனார் கோயில் வருடாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09செப் 2019 02:09
முதுகுளத்துார்:முதுகுளத்துார் தாலுகா மரவெட்டி கிராமத்தில் உள்ள பூவந்தி அய்யனார், செல்வ விநாயகர், கருப்பணசாமி கோயில்,ஆஞ்சநேயர் மற்றும் பரிவார தேவதைகளுக்கு முதலாம் ஆண்டு வருடாபிஷேக விழா, பால்குடம் திருவிழா நடைபெற்றது.
விழாவில் கிராமமக்கள் 10 நாட்களுக்கு முன்பு காப்புகட்டி விரதம் இருந்து வந்தனர். காலை 6:00 மணிக்கு பக்ததர்கள் செவ்வ விநாயகர் கோயிலிருந்து கிராமத்தின் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக பால்குடம் எடுத்து பூவந்தி அய்யனார் கோயில் வந்தனர்.பின்பு அய்யனார்க்கு பால் அபிஷேகம் மற்றும் தீபாராதனைகள் நடந்தது. காலை 11:00 மணிக்கு வருடாபிஷேக த்தை முன்னீட்டு 21 வகையான அபிஷேகங்கள் நடந்தது.
கிராமத்தின் சார்பில் பொது அன்னதானம் வழங்கப்பட்டது.விழாவிற்கு சுற்றுவட்டாரத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் மற்றும் கிராமமக்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாட்டினை மரவெட்டி கிராமமக்கள் செய்திருந்தனர்.