Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மதுரையில் ஆலய பாதுகாப்பு இயக்க ... புரட்டாசி சனி: கோயில்களில் குவிந்த பக்தர்கள் புரட்டாசி சனி: கோயில்களில் குவிந்த ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நவராத்திரி கொலு பொம்மைகள் உற்பத்தி தீவிரம்
எழுத்தின் அளவு:
நவராத்திரி கொலு பொம்மைகள் உற்பத்தி தீவிரம்

பதிவு செய்த நாள்

20 செப்
2019
04:09

அதியமான்கோட்டை: நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு, தர்மபுரி மாவட்டம், அதியமான்கோட்டையில், கொலு பொம்மை உற்பத்தி தீவிரமாக நடந்து வருகிறது. ஆண்டுதோறும், நவராத்திரி பண்டிகை, நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படும். இந்த நாட்களில் மக்கள் தங்கள் வீடுகளில் கொலு வைத்து வழிபடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். தர்மபுரி மாவட்டம், அதியமான்கோட்டையில், கொலு பொம்மை, கார்த்திகை விளக்கு, விநாயகர் சிலை தயாரிப்பது மற்றும் மண்பாண்ட தொழிலில், 20க்கும் மேற்பட்ட குடும்பத்தை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த மாதம் முதல் இவர்கள், கொலு ‍பொம்மைகள் தயாரிப்பில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். கொலு பொம்மை விற்பனை அதிகரித்த போதும், கட்டுப்படியான விலை கிடைப்பதில்லை என, உற்பத்தியாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இதுகுறித்து, அதியமான்கோட்டையை சேர்ந்த கொலு பொம்மை தயாரிக்கும் இந்துராணி, 55, கூறியதாவது: நவராத்திரி பண்டிகையின் போது, மக்கள் தங்கள் இல்லங்களில் கொலு வைக்க சமீப காலமாக அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். கொலு பொம்மைகள் செட் செய்ய, அதிக நாட்கள் தேவைப்படுகிறது. இவற்றை தயாரிக்க வேண்டிய மண், பெயின்ட் விலை மட்டுமின்றி, தொழிலாளர் கூலியும் உயர்ந்துள்ளது. கொலு பொம்மைகள் விற்பனை அதிகரித்தும், போதிய விலை கிடைக்காமல் கொலு பொம்பை உற்பத்தியாளர் பாதிக்கப்படுகின்றனர். வரும் நாட்களில், கொலு பொம்மைகளுக்கு உரிய விலை கொடுத்து வாங்க முன்வந்தால் மட்டுமே, இந்த தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் வாழ்வாதாரம் காக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். அதியமான்கோட்டையில் தயாரிக்கப்படும் கொலு பொம்மைகளை, பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள் மட்டுமின்றி, கர்நாடகாவிலிருந்து வந்தும் ஏராளமானோர்  வாங்கி செல்கின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே பூம்புகாரில் காவிரி ஆறு, கடல் சங்கமிக்கும் சங்கமத்துறையில் ... மேலும்
 
temple news
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் பொங்கல் கொண்டாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.சிதம்பரம் ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசிமக தேரோட்டத்தை முன்னிட்டு தேர் கட்டும் பணி தீவிரம் ... மேலும்
 
temple news
நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு அடுத்த சி.என்.பாளையம் மலையாண்டவர் என்கிற ராஜராஜேஸ்வரி சமேத ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காணும் பொங்கலையொட்டி, காஞ்சிபுரத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் நேற்று பக்தர்கள் கூட்டம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar