மத்வாச்சாரியாரின் வழியில் வந்த மகான் வியாச தீர்த்த பாத உடையார். இவர் திருப்பதியில் 12 ஆண்டுகள் தங்கி வெங்கடேசப் பெருமாளை தினமும் வழிபட்டார். குறிப்பிட்ட ஒரு பவுர்ணமி நாளில் ’குஹூ யோகம்’ என்னும் கிரகச்சேர்க்கை உண்டாவதால், நாடாளும் மன்னரின் உயிருக்கு ஆபத்து உண்டாகும் என்பதை அறிந்தார். இதனால் குறிப்பிட்ட நாளில் வியாச தீர்த்தர் மன்னருக்கு பதிலாக தானே சிம்மாசனத்தில் அமர்ந்தார். தன் தவசக்தியால் தீங்கு உண்டாகாமல் தடுக்கவும் செய்தார். அதனால் இந்த மகான் வியாசராஜா என்ற சிறப்பு பெயரும் பெற்றார்.