திருப்பதி ஏழுமலையானுக்கு கோயில் கட்டிய மன்னர் தொண்டைமான். இவர் தினமும் பெருமாளை தங்க தாமரையால் வழிபட்டார். ஒருநாள் பெருமாள் முன் மண் மலர்கள் கிடக்க கண்டார். இதற்கு காரணம் யார் என பெருமாளிடம் கேட்டார். ”குருவ கிராமத்தில் உள்ள பீமன் என்னும் குயவனே காரணம். சனிக்கிழமை விரதமிருக்கும் அவன், தினமும் மண் மலர்களால் அர்ச்சனை செய்வான். அவனது பக்தியை உலகறியச் செய்ய இந்த மண் மலர்களையும் ஏற்று அருள்புரிந்தேன்” என அசரீரி கேட்டது. பணத்தை விட பக்தியே அவசியம் என்பதை இந்த சம்பவம் மூலம் ஏழுமலையான் உணர்த்தினார்.