திருவாடானை: ஓரியூர் சர்ச்சில் திருயாத்திரை நடந்தது.திருவாடானை அருகே ஓரியூரில் புனித அருளானந்தர் சர்ச்சில் நேற்று திருயாத்திரை நிகழ்ச்சி நடந்தது.மதுரை மறைமாவட்ட பிஷப் அந்தோணிபாப்புசாமி தலைமை வகித்தார். திருப்பலி தொடக்க வழிபாட்டில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். வருகை பாடல், கும்பஆராத்தி, குத்துவிளக்கு ஏற்றுதல், இறைவார்த்தை வழிபாடு, தீர்த்தம் தெளித்தல் போன்ற நிகழ்ச்சிகளும் நடந்தன.மதுரை மறை மாவட்ட முதன்மை குரு ஜெயராஜ்,ஓரியூர் பாதிரியார் ஜோசப்மைக்கேல், மதுரை, சிவகங்கை, உட்பட பல பாதிரியார்கள் கலந்து கொண்டனர்.