பதிவு செய்த நாள்
03
அக்
2019
04:10
கோபிசெட்டிபாளையம்: பாரியூர் கொண்டத்துகாளியம்மன் குண்டம் தேர்த்திருவிழா, டிச.,26ல், பூச்சாட்டுதலுடன் துவங்குகிறது. கோபி தாலுகா, பாரியூரில் பிரசித்தி பெற்ற கொண்டத்து காளியம்மன் கோவில் உள்ளது.
இங்கு அம்மன் சன்னதி எதிரேயுள்ள, 60 அடி நீளத்தில் குண்டம் அமைந்திருப்பதே கோவிலின் சிறப்பாகும். இக்கோவிலில், நடப்பாண்டு குண்டம் மற்றும் தேர்த்திருவிழா, டிச.,26ல், பூச்சாட்டு தலுடன் துவங்குகிறது. 2020 ஜன.,6ல், சந்தன காப்பு அலங்காரம், ஜன.,9ல், திருக்குண்டம், 10ல் திருத்தேரோட்டம், 11ல் மலர்ப்பல்லக்கு, 18ல், மறுபூஜை நடக்கிறது. விழாவுக்கு உண்டான ஏற்பாடுகளை, அறநிலையத்துறையினர் செய்து வருகின்றனர்.