பதிவு செய்த நாள்
04
அக்
2019
01:10
சென்னை: வடபழநி ஆண்டவர் கோவில், சக்தி கொலு விழாவின், ஐந்தாம் நாளான நேற்று, கஜலட்சுமி அலங்காரத்தில், பக்தர்களுக்கு அம்பாள் அருள்பாலித்தார்.
வடபழநி ஆண்டவர் கோவிலில், நவராத்திரி, ஐந்தாம் நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. சக்தி கொலுவில் பிரதானமாக வீற்றுள்ள அம்பாள், கஜலட்சுமி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.இவ்விழாவில், சிறப்பு விருந்தினராக நடிகை வெண்ணிற ஆடை நிர்மலா, சென்னை சில்க்ஸ் உரிமையாளர் குடும்பத்தினர் உள்ளிட்ட ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர்.நேற்று மாலை, 4:00 மணிக்கு, சாய் வித்யாலயா வனமாலா குழுவினரின் இசைக் கச்சேரி நடந்தது. மாலை, 5:30 மணி முதல் மாலை, 6:00 மணி வரை, வேத பாராயணம், ஸ்ரீருத்ரம், சமஹம், ஸ்ரீ சூக்தம் நடந்தது. அதைத் தொடர்ந்து, லலிதா சகஸ்ரநாம பாராயணம் நடந்தது.பொதுமக்கள் கொலு பாட்டு நடந்தது. நேற்று மாலை, 7:00 மணிக்கு, தெளிவு பெற சக்தி கொடு எனும் தலைப்பில், இசைக்கவி ரமணனின் சொற்பொழிவு நடந்தது.ஏகதின லட்சார்ச்சனைசக்தி கொலு ஆறாம் நாளான இன்று, மீனாட்சி அம்மனுக்கு, ஏகதின லட்சார்ச்சனை நடக்கிறது. காலை, 7:30 மணி முதல், 12:30 மணி வரையிலும், மாலை, 4:30 மணி முதல் இரவு, 8:30 மணி வரையிலும் லட்சார்ச்சனை நடக்கிறது.