பதிவு செய்த நாள்
06
அக்
2019
03:10
இளையான்குடி:இளையான்குடி வாள்மேல் நடந்த அம்மன்கோயிலில் நவராத்திரி விழாவையொட்டி, திருவிளக்கு வழிபாடுமற்றும் கொலு பூஜை நடந்தது.
இக்கோயிலில் நவராத்திரி விழா, இளையான்குடி ஆயிர வைசிய சபையினரால்சிறப்பாக நடந்து வருகிறது. செப்.29 முதல் நாள் திருவிழாஅனுக்ஞை பூஜை, மகா கணபதி ஹோமம், துர்கா ஹோமம், காப்புகட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. தொடர்ந்து, தினமும் ராஜாங்கசேவை, காமாட்சி அம்மன் சேவை, உக்கிரபாண்டியன் சிறப்பு, அன்னபூரணி, அன்னை மீனாட்சி அம்மன் ஆகிய அலங்காரத்தில் அம்மன் காட்சியளித்தார். மேலும், அம்மனுக்கு தினந்தோறும் சிறப்பு அபிஷேகமும், ஆராதனையும் நடந்து வருகிறது. விழாவையொட்டி நடன நிகழ்ச்சி, ஆன்மிகசொற்பொழிவு, வீணை இன்னிசை நிகழ்ச்சி, கும்மிபாட்டு, நாட்டுப்புறப்பாட்டு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சி நடந்தது.பண்டரிநாதர் மாதர் பஜனைகுழுவினரால் திருவிளக்கு பூஜை நடந்தது.