வெங்கடரமண சுவாமி கோவிலில் புரட்டாசி சனிக்கிழமை சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06அக் 2019 03:10
கரூர்: தான்தோன்றிமலை வெங்கடரமண சுவாமி கோவிலில், புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையை முன்னிட்டு நேற்று சிறப்பு பூஜை நடந்தது. கரூர் அருகே, தான்தோன்றிமலையில், பிரசித்தி பெற்ற கல்யாண வெங்கடரமண சுவாமி கோவில் உள்ளது. இதில், ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் தேர்த்திருவிழா நடக்கிறது. நடப்பாண்டு கடந்த செப்டம்பர் மாதம், 30ல், கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. நேற்று காலை, புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையையொட்டி, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், மஹா தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள், நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமியை வழிபட்டனர்.